தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: முரளி விஜய் விலகல்!

தொடர்ந்து நன்றாக விளையாடி வருபவர். அவருடைய விலகல் எங்களுக்கு...

News image
Updated On :10 ஆகஸ்ட் 2015, 9:19 am

கடந்த ஒரு வருடமாக இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக விளங்கும் தொடக்க வீரர் முரளி விஜய், காயம் காரணமாக, கேலேவில் நடக்கும் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் முரளி விஜய்க்கு தசைநார் முறிவு காயம் ஏற்பட்டது. அதிலிருந்து அவர் வேறு எந்த முக்கியப் போட்டிகளிலும் கலந்துகொள்ளவில்லை. முதல் டெஸ்ட் போட்டிக்குள் காயம் சரியாகிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதுபற்றி கூறிய அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரி: முரளி விஜய் காயத்தில் இருந்து இன்னும் மீண்டுவரவில்லை. கேலேவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நாங்கள் எந்தவித ரிஸ்க்கும் எடுக்கவிரும்பவில்லை. விஜய், தொடர்ந்து நன்றாக விளையாடி வருபவர். அவருடைய விலகல் எங்களுக்கு இழப்புதான் என்றார்.

இதனால், 12-ம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் ராகுலும் தவானும் தொடக்க வீரர்களாக களமிறங்க உள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.