டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

வலிமையை இழக்காத சனி பகவான்!

சனி கிரகம் கிரகணம் அடைந்திருந்தாலும் தன்னுடைய வலிமையை இழக்காது என்பது உறுதியாகும்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 6:42 pm

தினமணி

ராகு,  கேது பகவான்கள் நின்ற பாதையில் சூரிய,  சந்திரப் பகவான்கள் கூடுவதை தான் நாம் சூரிய கிரகணம், சந்திர கிரகணம்  என்று கூறுகிறோம். ஆனால்,  வேறு கிரகங்கள் கூடுவதும் கிரகணம் என்று சொல்லப்படுகிறது.  குறிப்பாக சுக்கிர, சந்திர பகவான்கள்  கூடுவது, சுக்கிர, செவ்வாய் பகவான்கள் கூடுவது, செவ்வாய், சந்திர பகவான்கள் கூடுவது, சனி, செவ்வாய் பகவான்கள் கூடுவது போன்ற சேர்க்கைகள் ஏற்படலாம். 

வான மண்டலத்தில் ஒரு கிரகம் வேறு ஒரு கிரகத்தின் ஒளிப் பாதையில் வரும்போது, அக்கிரகத்தின் பின் நிற்கும்  ஒளியை நாம் பார்க்க முடியாது. இதையே நாம் கிரகணம் பிடிக்கிறது என்று சொல்கிறோம்.  நமக்கு சமீபத்தில் உள்ள கிரகம் அதற்கு பின்புறத்தில் உள்ள கிரகத்தின் ஒளியை மங்கச் செய்து விடுகிறது. இதனால் அக்கிரகத்தின் தோற்றமும் பிரகாசமும் அழகும் மறைகின்றன. இது கிரகணத் தோஷத்தால் ஏற்படுகிறது என்பது பொருந்துகிறது.

கிரகணம் பிடித்த கிரகம் கஷ்டத்தையும் நஷ்டத்தையும் உண்டு பண்ணும் என்று மகாதேவர் ஜாதக தத்துவம் என்ற நூலில் கூறியிருக்கிறார். ராசி மண்டலத்தில் சில கிரகங்கள் வலிமையான நிலையில் இருந்தாலும் அக்கிரகங்கள்  கிரகணமடையும்போது அவைகள் பலமிழந்து தங்கள் தசாபுக்தி காலங்களில் நற்பலன்களைத் தருவதில்லை என்று ஹோராச்சாரம் என்ற நூல் எடுத்துச் சொல்கிறது.

சுக்கிரப் பகவானையும், சனி பகவானையும் தவிர மற்ற கிரகங்கள் யாவும் கிரகணம் பிடிக்கும்போது அக்கிரகங்கள் அரை பங்கு வலிமையை இழந்து விடுகின்றனர் என்றும், சந்திர பகவான் கிரகண பிடிப்பில் இருந்தால் அந்த ஜாதகருக்கு பதவி வீழ்ச்சி, மூளைக் கோளாறு போன்ற பிணி பாதிப்புகள் உண்டாகும் என்றும் சில சமயம் நீரால் கண்டத்துக்கு ஆளாக கூடும் என்றும் சொல்லப்படுகிறது. செவ்வாய் கிரகம் கிரகணம் அடைந்தால் கஷ்டங்களும் கவலைகளும் பெருகும் எதையும் அழிக்கும் மிருக வெறி உண்டாகும் புதன் கிரகம் கிரகணம் அடைந்தால் விளைச்சல் நிலங்களால் நஷ்டமும் தீராத மனக்கவலைகளும் உண்டாகும். 

குரு கிரகம் கிரகணம் அடைந்திருந்தால் இன்பமும் துன்பமும் சரிசமமாக இருக்கும். சனி கிரகம் கிரகணம் அடைந்திருந்தால் வருவாயும் செலவும் சரிசமமாக இருக்கும். சிந்தனை தோன்றும். திக்கெட்டிலும் புகழ் பரவும். இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால் சனி கிரகம் கிரகணம் அடைந்திருந்தாலும் தன்னுடைய வலிமையை இழக்காது என்பது நிரூபணமாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.