ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி: பிளாஸ்டிக் பயன்படுத்தத் தடை!  

சிவராத்திரியை முன்னிட்டு வெள்ளியங்கிரி மலைக்கு நாளை முதல் 20ம் தேதி வரை பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது. 

News image
Updated On :17 பிப்ரவரி 2023, 6:53 am

சிவராத்திரியை முன்னிட்டு வெள்ளியங்கிரி மலைக்கு நாளை முதல் 20ம் தேதி வரை பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது. 

கோவையில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலை ஒட்டியுள்ள மலைத்தொடரில் ஏழாவது மலையில், சுயம்பு லிங்கத்தை தரிசிக்க மார்ச் முதல் மே மாதம் வரையிலான மூன்று மாதங்கள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதிக்கப்படுகிறது. 

இந்நிலையில் நாளை முதல் 20-ம் தேதி வரை பக்தர்கள் மலைக்கு செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. 

மலையேறும் பக்தர்கள் பிளாஸ்டிக் கொண்டு செல்வதைத் தடுக்க, வனப்பணியாளர்கள் தன்னார்வலர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிகளை வனத்திற்குள் வீசுவதைத் தவிர்ப்பதற்காக வனத்துறை புதிய திட்டம் வகுத்துள்ளது. அதாவது கொண்டுவரும் தண்ணீர் பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு, முன்பணமாக ரூ.20 பெறப்பட்டு, மலைக்கு சென்று திரும்பும்போது ஸ்டிக்கர் ஒட்டிய பாட்டில்களை கொடுத்துவிட்டு, அந்த பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.