தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

விராலிமலை அம்மன் கோயிலில் 4004 பெண்கள் பங்கேற்ற குத்துவிளக்கு பூஜை!

விராலிமலை அம்மன் கோயிலில் 4004 பெண்கள் பங்கேற்ற மார்கழி மாத மகா விளக்குப் பூஜையை மக்களவை உறுப்பினர் செல்வி ஜோதிமணி செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடக்கிவைத்தார்.

News image

எம்பி ஜோதிமணி முதல் பூஜையைக் குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கி வைத்தார்.

Updated On :19 டிசம்பர் 2023, 7:06 am

விராலிமலை அம்மன் கோயிலில் 4004 பெண்கள் பங்கேற்ற மார்கழி மாத மகா விளக்குப் பூஜையை மக்களவை உறுப்பினர் செல்வி ஜோதிமணி செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடக்கிவைத்தார். மார்கழி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமை என 9 பூஜைகள் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

விராலிமலை அம்மன் கோயிலில் மார்கழி மாதம் முழுவதும் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் திருவிளக்கு பூஜை நேற்று தொடங்கியது. இதில் மங்கள இசையுடன், பக்தி பாடல்கள் பாடி ஆயிரக்கணக்கான பெண்கள் விளக்குப் பூஜையில் பங்கேற்று வழிபட்டனர்.

விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோயில் பிரசித்தி பெற்ற தலமாகும் சுற்றுப்பகுதி மக்களின் காவல் தெய்வமாகவும், குலதெய்வமாகவும் விளங்கும் அம்மன் கோயிலில் வருடம் முழுவதும் பல்வேறு விழாக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும்.

அதேபோல மார்கழி மாதம் முழுவதும் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை நடைபெறும் 34ம் ஆண்டு திருவிளக்கு பூஜை இன்று அதிகாலை தொடங்கியது. இப்பூஜை வரும் தை மாதம் 1ம் தேதி நிறைவடைகிறது. மொத்தம் ஒன்பது விளக்குப் பூஜையின் முதலாவது திருவிளக்கு பூஜை கோமாதா பூஜையுடன் தொடங்கியது.

Story image

இதில் 4004 பெண்கள் பங்கேற்று அம்மன் பக்தி பாடல்களைப் பாடி விளக்குப் பூஜை வழிபாட்டில் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற எம்பி ஜோதிமணி பெண்களுடன் தரையில் அமர்ந்து விளக்குப் பூஜை செய்து வழிபட்டார். இதுபோன்ற பூஜைகள் செய்யும்போது குடும்ப உறுப்பினர்கள் ஆயுட்காலம் கூடும், கன்னிப் பெண்களுக்கு திருமண பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம்.

விழாவில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முருகேசன், விராலிமலை திமுக ஒன்றிய செயலாளர் இளங்குமரன்(மேற்கு), அய்யப்பன்(மத்தி), ஊராட்சி மன்ற தலைவர்கள் ரவி(விராலிமலை), ஜெயலட்சுமி குமார்(வடுகபட்டி),காங்கிரஸ் வட்டார தலைவர் சட்டையப்பன், அன்பு, ராஜா குமாரசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழா நாள்களில் அம்மன் வெள்ளிக் கவசம் அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. விழா ஏற்பாடுகளை குருக்கள் சுந்தரம் சுவாமிகள் தலைமையில் அய்யப்பா சேவா சங்கத்தினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.