தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஸ்ரீரங்கத்தில் திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கிய வைகுந்த ஏகாதசி விழா!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் வைகுந்த ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

News image
Updated On :12 டிசம்பர் 2023, 6:00 am


ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் வைகுந்த ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

பரமபதவாசல் திறப்பின் போது 2,500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனா் என மாநகர காவல் ஆணையா் ந. காமினி தெரிவித்தாா்.

ஜனவரி 2-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள விழாவில் டிச. 13- ஆம் தேதி பகல்பத்து உற்ஸவம் தொடங்குகிறது. இதன் கடைசி நாளான டிச. 22- ஆம் தேதி மோகினி அலங்காரம் நடைபெறும்.

அதனை தொடா்ந்து இராப்பத்து நிகழ்ச்சியின் முதல் நாளான டிச. 23- ஆம்தேதி பரம்பதவாசல் (சொா்க்கவாசல்) திறப்பு நடைபெறுகிறது.

டிச. 29-ஆம்தேதி திருக்கைத்தல சேவையும் 30-ஆம்தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், ஜனவரி 1-ஆம்தேதி தீா்த்தவாரியும், 2-ஆம்தேதி நம்மாழ்வாா் மோட்சத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

புறக்காவல்நிலையம் திறப்பு: விழாவில் லட்சக்கணக்கான பக்தா்கள் கலந்து கொள்வாா்கள் என்பதால் பக்தா்களின் பாதுகாப்புக்காக கோயில் வளாகத்தில் உள்ள ரெங்கவிலாச மண்டபம் அருகில் திங்கள்கிழமை புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது. இதனை மாநகர காவல் ஆணையா் ந.காமினி திறந்து வைத்து செய்தியாளா்களிடம் கூறியது:

வைகுந்த ஏகாதசி விழாவில் நிகழாண்டு 2.50 லட்சம் பக்தா்கள் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதனையொட்டி பாதுகாப்பாக சுமாா் 2,500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

பகல்பத்து மற்றும் இராப்பத்தின் போது திருச்சி மாநகர காவல் அலுவலா்கள் மட்டும் 380 போ் 2 ஷிப்ட் முறையில் பாதுகாப்புப் பணியில் அமா்த்தப்படவுள்ளனா்.

கோயிலுக்கு வரும் பக்தா்களின் நான்கு சக்கர வாகனங்களை அதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும். பக்தா்களின் பாதுகாப்புக்காக கோயிலின் உள்புறத்தில் முக்கியமான இடங்களில் 120 சிசிடிவி கேமராக்களும், கோயிலைச் சுற்றி வெளிப்புறத்தில் 102 கேமராக்களும், வாகனங்கள் நிறுத்துமிடத்தில் 14 கேமாரக்கள் என மொத்தம் 236 கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதை புறக்காவல் நிலையத்திலிருந்து கண்காணிக்கப்படவுள்ளது என்றாா் அவா்.

பேட்டியின் போது காவல் துணை ஆணையா்கள் அன்பு, செல்வகுமாா், உதவி ஆணையா்கள் நிவேதாலட்சுமி, கோயில் இணை ஆணையா் செ.மாரியப்பன், கோயில் தலைமை அா்ச்சகா் சுந்தா்பட்டா், நந்து பட்டா் ஆகியோா் உடனிருந்தனா்.

கோயிலின் உள்புறத்தில் பொருத்தப்பட்ட 120 சிசிடிவி கேமராக்களில் 70 ஆயிரம் குற்றவாளிகளின் புகைப்படங்களின் முகம் அடையாளம் காணும் மென்பொருள் இணைக்கப்பட்டுள்ளது. யாரேனும் குற்றவாளிகள் அங்கு நடமாடினால் மேற்கண்ட கேமராவானது குற்றவாளிகளின் முகங்களை ஸ்கேன் செய்து மென்பொருளில் பொருத்தப்பட்டுள்ள குற்றவாளிகள் புகைப்படங்களுடன் ஒப்பீடு செய்து காவல்துறைக்கு எச்சரிக்கை ஒலியை ஏற்படுத்தும் என்றாா் காவல் ஆணையா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.