தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ரத்ன அங்கி சேவை காட்சி

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பெருந்தேவி தாயாருடன் வரதராஜ பெருமாள் ரத்ன அங்கி அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

News image
Updated On :12 டிசம்பர் 2023, 6:52 am

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பெருந்தேவி தாயாருடன் வரதராஜ பெருமாள் ரத்ன அங்கி அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

அத்திவரதர் புகழ்பெற்றதும், ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட பெருமைக்குரியதும், வரலாற்றுச் சிறப்பும் மிக்கது காஞ்சிபுரத்தில் உள்ள பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவில். 

இத்திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஸ்ரீ தாத தேசிகன் சாற்றுமுறை உற்சவத்தன்று ஒரு நாள் மட்டும் ஸ்ரீதேவி பூதேவியுடன் உற்சவர் வரதராஜ பெருமாளும் பெருந்தேவி தாயாரும் ரத்ன அங்கி அணிந்து ஆலய வளாகத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் அளிப்பார்கள். 

செவ்வாய்க்கிழமை தாத தேசிகன் சாற்று முறை உற்சவ நாளை முன்னிட்டு காலையில் பெருமாளும் தாயாரும் ரத்ன அங்கி சேவை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் ஆலய வளாகத்தில் உள்ள ஆழ்வார் சுற்றுப்பிரகாரத்தில் வலம் வந்து தேசிகன் சன்னதிக்கு எழுந்தருளினர். அங்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.

Story image

பின்னர் தேசிகனுக்கு மாலை மரியாதைகள் அணிவித்து சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றது. மதியம் உற்சவர் வரதராஜ பெருமாளுக்கும், பெருந்தேவித் தாயாருக்கும் சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது. மாலையில் பெருமாளும் தாயாரும் சிறப்பு அலங்காரத்தில் ஆலயத்தின் சுற்றுப்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளனர்.

ஆண்டுக்கு ஒரு நாள் மட்டும் நடைபெறும் பெருமாளின் ரத்ன அங்கி சேவைக் காட்சியைக் காண வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளைத் தரிசித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.