அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

அமர்நாத்: 3,048 பேர் அடங்கிய யாத்ரீகர்கள் குழு ஜம்முவில் இருந்து புறப்பாடு

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அமர்நாத் புனித யாத்திரைக்கு ஜம்முவில் இருந்து புதிய யாத்ரீகர்கள் குழு ஒன்று இன்று புறப்பட்டுச் சென்றனர். 

News image
Updated On :14 ஜூலை 2018, 8:05 am

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அமர்நாத் புனித யாத்திரைக்கு ஜம்முவில் இருந்து புதிய யாத்ரீகர்கள் குழு ஒன்று இன்று புறப்பட்டுச் சென்றனர். 

கடந்த ஜூன் 28-ம் தேதி அமர்நாத் புனித யாத்திரை தொடங்கியது. 60 நாள் நடைபெறும் அமர்நாத் புனித யாத்திரை பால்தால் மற்றும் பஹல்காம் வழியாகப் பக்தர்கள் மலைக்கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

இந்நிலையில், 3,048 பேர் அடங்கிய யாத்ரீகர்கள் குழு இன்று புறப்பட்டுள்ளனர். இதில், 623 பெண்கள் மற்றும் 144 சாதுக்கள் என மொத்தம் 122 வாகனங்களில் படுத்த பாதுகாப்புடன் புறப்பட்டுச் சென்றுள்ளனர். 

இதில், 1, 973 யாத்ரீகர்கள் பஹல்காம் வழியாகவும், 1,075 யாத்ரீகர்கள் பால்தால் வழியாகவும் அனுப்பப்பட்டுள்ளனர். 

ஆகஸ்ட் 26-ம் தேதி ரக்ஷா பந்தன் அன்று அமர்நாத் புனித யாத்திரை நிறைவடைகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.