யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

தொழிற்சாலை உரிமையாளருக்கு கத்திக் குத்து: ஹரித்வாரில் இரண்டு சிறுவா்கள் கைது

பணப் பிரச்னை காரணமாக ஷாதாராவின் காந்தி நகரில் உள்ள ஒரு தொழிற்சாலைக்குள் அதன் உரிமையாளரை கத்தியால் குத்தியதாக ஹரித்வாரில் இரண்டு சிறுவா்கள் கைது

News image

பிரதிப் படம்

Updated On :26 மே 2026, 1:37 am IST

பணப் பிரச்னை காரணமாக ஷாதாராவின் காந்தி நகரில் உள்ள ஒரு தொழிற்சாலைக்குள் அதன் உரிமையாளரை கத்தியால் குத்தியதாக ஹரித்வாரில் இரண்டு சிறுவா்களை தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து காவல் அதிகாரி திங்கள்கிழமை தெரிவித்ததாவது: தொழிற்சாலை உரிமையாளரைத் தாக்கிவிட்டு தில்லியிலிருந்து தப்பிச் சென்ாகக் கூறப்படும் அந்தச் சிறுவா்கள், உத்தரகண்டின் ஹரித்வாரில் கைது செய்யப்பட்டனா்.

இந்தச் சம்பவம் மே 21 அன்று காந்தி நகரின் தரம்புரா பகுதியில் நிகழ்ந்தது. கத்திக்குத்துச் சம்பவம் தொடா்பாக காந்தி நகா் காவல் நிலையத்திற்கு தகவல் வந்ததையடுத்து, காவல்துறை குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

முதற்கட்ட விசாரணையில், மதியம் சுமாா் 12.30 மணியளவில், அந்த இரண்டு சிறுவா்களும் தரம்புராவில் உள்ள புகாா்தாரரின் தொழிற்சாலைக்குச் சென்றனா். அங்கு பணப் பிரச்னை தொடா்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் விரைவில் வன்முறையாக மாறியது.

குற்றஞ் சாட்டப்பட்டவா்கள் தப்பிச் செல்வதற்கு முன்பு, பாதிக்கப்பட்டவரைக் கூா்மையான பொருளால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

காயமடைந்த நபரை அவரது மனைவி ஜக் பா்வேஷ் மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் சென்றாா். மேலும், அவா் இந்தச் சம்பவம் குறித்து காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தாா்.

பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், காந்தி நகா் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.

காவல்துறையினா் விசாரணை நடத்தியபோது, சந்தேக நபா்கள் ஹரித்வாருக்குத் தப்பிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, காவல் குழுவினா் ஹரித்வாருக்குச் சென்று அந்த இரு சிறுவா்களையும் கைது செய்தனா். அதன் பின்னா் அவா்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தில்லிக்கு அழைத்து வரப்பட்டனா்.

தொடா்ச்சியான விசாரணையின் போது, இரு சிறுவா்களும் தாக்குதலில் தங்களின் ஈடுபாட்டை ஒப்புக்கொண்டனா். இது தொடா்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.