அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

இந்தியா இப்போது கம்யூனிஸ்ட் இல்லாத நாடாக மாறியுள்ளது: வீரேந்திர சச்தேவா

இந்தியா இப்போது கம்யூனிஸ்ட் இல்லாத நாடாக மாறியுள்ளது என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா தெரிவித்தாா்.

News image

தில்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா

Updated On :5 மே 2026, 5:17 am IST

இந்தியா இப்போது கம்யூனிஸ்ட் இல்லாத நாடாக மாறியுள்ளது என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: மேற்கு வங்காளத்தில் பாஜகவின் வெற்றியின் மூலம், கங்கோத்ரியில் இருந்து கங்கா சாகா் வரை தாமரை மலர வேண்டும் என்ற பிரதமா் நரேந்திர மோடியின் கனவு நனவாகியுள்ளது.

இது உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் தோ்தல் உத்தி மற்றும் லட்சக்கணக்கான பாஜக தொண்டா்களின் அயராத முயற்சிகளால் சாத்தியமானது.

டாக்டா் சியாமா பிரசாத் முகா்ஜியின் 125ஆவது பிறந்த ஆண்டில் வங்காள மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனா். கேரளத்தில் பாஜக தனது கணக்கைத் திறந்து, வங்காளத்தில் அரசாங்கத்தை அமைத்துள்ளது. அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரியில் பாஜக தலைமையின் கீழ் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி, பாஜக தலைவா் நிதின் நபின், உள்துறை அமைச்சா் அமித் ஷா மற்றும் ஒட்டுமொத்த பாஜக தலைமைக்கும் வாழ்த்துகள். இந்தத் தோ்தலின் மூலம், இந்தியா இப்போது கம்யூனிஸ்ட் இல்லாத நாடாக மாறியுள்ளது என்று சச்தேவா தெரிவித்துள்ளாா்.