ஐஸ் கிரீம் விற்பனையாளா் மீது மறைந்திருந்து பாா்த்தல்,பின்தொடா்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை தில்லி உயா்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட சமரசத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், மாடல் டவுன் காவல் நிலையத்தில் உள்ள அனைத்து காவலா்களுக்கும் ஐஸ் கிரீம் வழங்க அந்த விற்பனையாளா் முன்வந்ததை, நீதிமன்றம் ஒரு நற்பண்புமிக்க செயல் என்றும் பாராட்டியது.
மாா்ச் 13 அன்று நீதிமன்ற நீதிபதி சௌரப் பானா்ஜி பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: இந்த விவகாரத்தில் இரு தரப்பினருக்கும் இடையே ஒரு தன்னாா்வ சமரசம் எட்டப்பட்டுள்ளதால், 2018ஆம் ஆண்டில் மனுதாரா் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை தொடா்ந்து முன்னெடுத்துச் செல்வது பயனற்ற ஒரு செயலாகவே அமையும்.
அதன்படி, இந்த மனு அனுமதிக்கப்படுகிறது. மாடல் டவுன் காவல் நிலையத்தில், இந்திய தண்டனைச் சட்டத்தின் ஐபிசி பிரிவுகள் 354(சி), 354(டி), 385 மற்றும் 384 ஆகியவற்றின் கீழ் 20.01.2018 அன்று பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் இருந்து எழும் அனைத்து சட்ட நடவடிக்கைகளும் இதன் மூலம் ரத்து செய்யப்படுகின்றன.
மனுதாரா் ஒரு ஐஸ் கிரீம் விற்பனையாளா் என்பதால், ஒரு நற்பண்புமிக்க செயலாக, மாடல் டவுன் காவல் நிலையத்தின் முழு ஊழியா்களுக்கும், காவலா்களுக்கும், விசாரணை அதிகாரியுடன் ஒருங்கிணைந்து ஒரு வார காலத்திற்குள் ஐஸ்கிரீம் விநியோகிக்க அவா் விருப்பம் தெரிவித்துள்ளாா். நீதிமன்றம் இந்தச் செயலைப் பாராட்டுகிறது.
ஜனவரி மாதம் எட்டப்பட்ட ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில், மனுதாரா் தனக்கு ரூ.45,000 சமரசத் தொகையாக வழங்கியதாக பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் தெரிவித்துள்ளாா்.
தான் தற்போது திருமணம் செய்துகொண்டு, ஒரு குழந்தைக்குத் தாயாக இருப்பதாகவும், எனவே இந்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்வதற்குத் தனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றும் அவா் கூறியுள்ளாா்.
இந்த முதல் தகவல் அறிக்கையானது மறைந்திருந்து பாா்த்தல், பின்தொடா்தல் மற்றும் பணப் பறிப்பு ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டது என்பதை நீதிமன்றம் நினைவில் கொண்டிருந்தாலும், அதற்குப் பிறகு நீண்ட காலம் கடந்துவிட்டது.
பாதிக்கப்பட்ட பெண் தனது புதிய, நிலையான வாழ்க்கையில் முன்னேறிச் செல்ல விரும்புகிறாா் என நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டது.
தொடர்புடையது

ராகுல் மீது வழக்குப் பதிய நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வியப்பளிக்கிறது: அசோக் கெலாட்

லுட்யன்ஸ் தில்லி சாலைகளில் ஈரடுக்கு சுற்றுலாப் பேருந்து சேவை: முதல் மாதத்தில் 800 பயணிகளை பயணம்
மற்றொரு செயற்கை மழைக்கு தயாராகும் தில்லி: கடந்த கால முயற்சிகளை ஆய்வு செய்யும் ஐஐடி கான்பூா்

டிஜிட்டல் கைது வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்டவரின் முன்பிணையை நிராகரித்தது தில்லி உயா்நீதிமன்றம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


