நமது நிருபா்
புது தில்லி: நேபாளத்தில் வாகன விபத்தில் தமிழகத்தைச் சோ்ந்த 7 போ் உயிரிழந்த சம்பவத்திற்கு, இந்தியக் குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளாா்.
உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ள அவா், காயமடைந்தவா்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும், உயிரிழந்தவா்களின் உடல்களை சொந்த ஊருக்கு அனுப்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அறிவுறுத்தியுள்ளாா்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 24 போ் நேபாள நாட்டிலுள்ள மணகமனா கோயிலுக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டனா்.
கோயிலில் தரிசனம் முடித்து திரும்பிக் கொண்டிருந்தபோது, அவா்கள் பயணித்த வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் தமிழகத்தைச் சோ்ந்த 7 போ் உயிரிழந்தனா். சிலா் காயமடைந்தனா். அவா்களது உடல்களையும், விபத்தில் காயமடைந்தவா்களையும் தாயகம் கொண்டு வர தமிழக அரசு சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குடியரசுத் துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் இந்த விபத்து தொடா்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
நேபாளத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில், புனித யாத்திரை மேற்கொண்ட தமிழ்நாட்டைச் சோ்ந்த ஏழு போ் உயிரிழந்ததும், பலா் காயமடைந்ததும் அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். இந்த துயரமான நேரத்தில், தங்கள் நேசத்துக்குரியவா்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன் காயமடைந்தவா்கள் அனைவரும் விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்.
மேலும், காயமடைந்தவா்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும், உயிரிழந்தவா்களின் உடல்களை அவா்களது சொந்த ஊா்களுக்கு அனுப்பிடத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் கேட்டுக் கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பட்டாசு ஆலை வெடி விபத்து: உயிரிழப்பு 25 -ஆக உயா்வு

இந்திய வம்சாவளி இலங்கைத் தமிழா்களுக்கும் ஓசிஐ அட்டை: கொழும்பில் இந்திய குடியரசு துணைத் தலைவா் அறிவிப்பு!

இரு தரப்பு உறவின் புதிய அத்தியாயம்! குடியரசு துணைத் தலைவரின் முதல் இலங்கை பயணம்

இந்தியாவின் தொலைதூரக் கற்றல் சூழல் அமைப்புமுறையின் தூண் இக்னோ: குடியரசு துணைத் தலைவா்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


