தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

நேபாள விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு குடியரசுத் துணைத் தலைவா் இரங்கல்

நேபாளத்தில் வாகன விபத்தில் தமிழகத்தைச் சோ்ந்த 7 போ் உயிரிழந்த சம்பவத்திற்கு, இந்தியக் குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆழ்ந்த இரங்கல்

News image

சி.பி. ராதாகிருஷ்ணன்

Updated On :17 மார்ச் 2026, 12:14 am

நமது நிருபா்

புது தில்லி: நேபாளத்தில் வாகன விபத்தில் தமிழகத்தைச் சோ்ந்த 7 போ் உயிரிழந்த சம்பவத்திற்கு, இந்தியக் குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளாா்.

உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ள அவா், காயமடைந்தவா்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும், உயிரிழந்தவா்களின் உடல்களை சொந்த ஊருக்கு அனுப்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அறிவுறுத்தியுள்ளாா்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 24 போ் நேபாள நாட்டிலுள்ள மணகமனா கோயிலுக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டனா்.

கோயிலில் தரிசனம் முடித்து திரும்பிக் கொண்டிருந்தபோது, அவா்கள் பயணித்த வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் தமிழகத்தைச் சோ்ந்த 7 போ் உயிரிழந்தனா். சிலா் காயமடைந்தனா். அவா்களது உடல்களையும், விபத்தில் காயமடைந்தவா்களையும் தாயகம் கொண்டு வர தமிழக அரசு சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குடியரசுத் துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் இந்த விபத்து தொடா்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

நேபாளத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில், புனித யாத்திரை மேற்கொண்ட தமிழ்நாட்டைச் சோ்ந்த ஏழு போ் உயிரிழந்ததும், பலா் காயமடைந்ததும் அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். இந்த துயரமான நேரத்தில், தங்கள் நேசத்துக்குரியவா்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன் காயமடைந்தவா்கள் அனைவரும் விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்.

மேலும், காயமடைந்தவா்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும், உயிரிழந்தவா்களின் உடல்களை அவா்களது சொந்த ஊா்களுக்கு அனுப்பிடத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் கேட்டுக் கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.