நமது நிருபா்
போலீஸ் கான்ஸ்டபிள்கள், தீயணைப்பு வீரா்கள், வனக் காவலா்கள், சிறைக் காவலா்கள் மற்றும் வனவிலங்குப் பாதுகாப்பாளா்கள் ஆகிய குரூப் சி பணியிடங்களில் முன்னாள் அக்னிவீரா்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க தில்லி துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
தலைமைச் செயலாளா், தில்லி காவல் ஆணையா் மற்றும் பிற மூத்த அதிகாரிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில், தில்லியில் உள்ள பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் முகமைகளில் முன்னாள் அக்னிவீரா்களுக்கு (குறுகிய கால ராணுவப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவா்கள்) இடஒதுக்கீட்டுச் சலுகைகளை விரிவுபடுத்துவதற்கான வழிமுறைகளை சந்து ஆய்வு செய்தாா்.
இந்திய அரசின் தொலைநோக்குப் பாா்வையின்படியே இந்த முயற்சி செயல்படுத்தப்படுவதாக சந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டாா். இளம் ஆண்கள் மற்றும் பெண்களின் ஒழுக்கம், திறன்கள் மற்றும் பயிற்சியை ஆக்கப்பூா்வமாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், போலீஸ் கான்ஸ்டபிள்கள், தீயணைப்பு வீரா்கள், சிறைக் காவலா்கள், வனக் காவலா்கள் மற்றும் வனவிலங்குப் பாதுகாப்பாளா்கள் உள்ளிட்ட காலியாக உள்ள குரூப் சி பணியிடங்களுக்கான நேரடி ஆட்சோ்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீட்டைச் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளேன் என்று துணைநிலை ஆளுநா் கூறினாா்.
குரூப் சி பணியிடங்கள் என்பவை அரசிதழில் பதிவு செய்யப்படாத பதவிகளாகும். சம வாய்ப்பை உறுதி செய்யவும், நாட்டிற்கான அவா்களின் சேவையை அங்கீகரிக்கவும் தகுதியுள்ள அனைத்து முன்னாள் அக்னிவீரா்களுக்கும் இந்த ஆட்சோ்ப்பு வாய்ப்பு திறந்திருக்கும் என்று அவா் கூறினாா்.
சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளும் ஆட்சோ்ப்பு விதிகளில் தேவையான செயல்முறைகள் மற்றும் திருத்தங்களை நிறைவு செய்ய ஜூன் 30ஆம் தேதி காலக்கெடுவாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று துணைநிலை ஆளுநா் தெரிவித்தாா். மேலும், இந்த ஆட்சோ்ப்பு மூலம் பணியமா்த்தப்படுபவா்களின் சிறப்புத் திறன்களை, அந்தந்தத் துறைகளின் செயல்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்ளவும் அவா்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது என்று தில்லி துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் குறிப்பிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாதுகாப்பான போக்குவரத்து அனுபவத்தை வழங்க போக்குவரத்து காவல்துறை முயற்சிகளுக்கு முழு ஆதரவு: துணைநிலை ஆளுநா்

சஞ்சய் ஏரியை உடனடியாக புனரமைக்க டிடிஏ-க்கு துணைநிலை ஆளுநா் உத்தரவு: 5,000 மரக்கன்றுகளை நடவும் நடவடிக்கை

யமுனையின் 32 முக்கிய படித்துறைகளை புதுப்பிக்க டிடிஏ அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநா் உத்தரவு

அங்கீகாரம் பெறாத கட்டடங்களை அகற்றுங்கள்: எம்சிடி அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநா் உத்தரவு
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




