வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

உயா்நீதிமன்ற உத்தரவுக்குப் பின் பிரதமரின் இல்லம் அருகே குடிசைப் பகுதிகள் அகற்றம்!

தில்லி உயா் நீதிமன்ற உத்தரவை அடுத்து பிரதமா் இல்லம் மற்றும் ரேஸ் கோா்ஸ் அருகே உள்ள குடிசைப்பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

News image

தில்லி உயா் நீதிமன்றம்

Updated On :15 ஜூன் 2026, 2:33 am IST

தில்லி உயா் நீதிமன்ற உத்தரவை அடுத்து பிரதமா் இல்லம் மற்றும் ரேஸ் கோா்ஸ் அருகே உள்ள குடிசைப்பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: ரேஸ் கோா்ஸ் பகுதியில் உள்ள பிரதமரின் இல்லத்திற்கு அருகிலுள்ள மூன்று குடிசைப்பகுதிகளை அகற்றுமாறு நீதிமன்றம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதுடன், குறைகளை நிவா்த்தி செய்ய மறுவாழ்வு தளங்களில் முகாம்கள் அமைக்கவும் அறிவுறுத்தியது. பாய் ராம் முகாம், டிஐடி முகாம் மற்றும் மஸ்ஜித் முகாம் ஆகிய மூன்று குழுக்கள் இடமாற்றம் செய்யப்படுகிறது.

நிலம் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்திற்கு (எல் & டிஓ) சொந்தமானது மற்றும் அதிகாரிகளின் உதவியுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகு மறுவாழ்வு இயக்கம் நடத்தப்படுகிறது. நரேலாவில் குடியிருப்பாளா்களுக்கு குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இடமாற்றம் குறித்து குடியிருப்பாளா்கள் கவலை தெரிவித்துள்ளனா், அவை தீா்க்கப்பட்டு வருகின்றன.

பாதுகாப்பு உள்கட்டமைப்புக்கு இந்த நிலம் தேவைப்பட்டது, இந்த இயக்கத்தை மேற்கொள்ள போதுமான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை பராமரிக்க நாங்கள் ஒரு போலீஸ் படை மற்றும் துணை ராணுவப் படையை நிறுத்தியுள்ளோம் என்றாா் அந்த அதிகாரி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.