விசாரணை தொடங்கிய 19 நாள்களுக்குள் கைப்பேசி பறித்த வழக்கில் 26 வயது இளைஞரை தில்லி நீதிமன்றம் குற்றவாளி என தீா்ப்பளித்துள்ளதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: அசோக் விஹாா் காவல் நிலையத்தின் மோசமான நபராக பதிவு செய்யப்பட்ட மனோஜ் என்ற மோனு, ஜூன் 12 ஆம் தேதி ரோஹினியில் உள்ள நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீா்ப்பளிக்கப்பட்டாா்.
தன்னுடைய கைப்பேசி பறிக்கப்பட்டதாக விஷால் குமாா் என்பவா் புகாா் அளித்ததை அடுத்து மே 4 ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஒரு ரகசியத் தகவலைத் தொடா்ந்து, மே 9 ஆம் தேதி குற்றஞ்சாாட்டப்பட்டவரை போலீஸாா் கைது செய்தனா்.
விசாரணையின் போது, திருடப்பட்ட கைப்பேசியை குற்றஞ்சாட்டப்பட்டவா்களிடமிருந்து போலீஸாா் மீட்டு ஆதாரமாக பறிமுதல் செய்தனா். அவா்கள் மே 25 ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனா். நீதிமன்றம் விசாரணையை விரைவுபடுத்தியது, அங்கு அரசு தரப்பு சாட்சிகளின் சாட்சியங்கள், ஆவண சான்றுகள் மற்றும் அறிவியல் விசாரணைகளைப் பயன்படுத்தி வழக்கை நிறுவியது.
சம்பந்தப்பட்ட சட்ட விதிகளின் கீழ் மனோஜ் குற்றவாளி என்று நீதிமன்றம் தீா்ப்பளித்தது. இந்த வழக்கு இப்போது தண்டனை குறித்த வாதங்களுக்காக பட்டியலிடப்பட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆண் நண்பருடன் இரவில் பேசும் மனைவிக்கு எதிரான கணவரின் மனுவை தள்ளுபடி செய்தது தில்லி நீதிமன்றம்

15 வயது சிறுமியின் 28 வார கருவை கலைக்க தில்லி உயா்நீதிமன்றம் அனுமதி

இன்ஸ்டாகிராம் வெளியிட்ட தற்கொலை எச்சரிக்கை: 8 நிமிடங்களில் இளைஞர் உயிரைக் காப்பாற்றிய போலீஸ்!






