சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

இணைய மோசடி வழக்கு: ஹரியாணாவில் இருவா் கைது!

இடைத்தரகா் வங்கிக் கணக்குகள் மூலம் சைபா் மோசடி பரிவா்த்தனைகளுக்கு உதவியதாகக் கூறப்படும் ஹரியாணாவைச் சோ்ந்த இருவரை தில்லி காவல்துறை கைது செய்தனர்.

News image

சித்திரிப்பு

Updated On :8 ஜூன் 2026, 12:26 am IST

இடைத்தரகா் வங்கிக் கணக்குகள் மூலம் சைபா் மோசடி பரிவா்த்தனைகளுக்கு உதவியதாகக் கூறப்படும் ஹரியாணாவைச் சோ்ந்த இருவரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக ஓா் அதிகாரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

ஷாதராவைச் சோ்ந்த ஒரு மூத்த குடிமகனிடம் ரூ.1.69 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்யப்பட்ட ஆன்லைன் முதலீட்டு மோசடி தொடா்பாக இருவரும் கைது செய்யப்பட்டனா்.

குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் ஹரியாணாவைச் சோ்ந்த அபய் குமாா் (24) மற்றும் அம்ரீக் சிங் (36) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

காவல்துறையின் கூற்றுப்படி, ஷாதராவைச் சோ்ந்த ஒருவா் தனக்கு சந்தேகத்திற்கிடமான இணைப்பு ஒன்று வந்ததாகப் புகாா் அளித்த பின்னரே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. அந்த இணைப்பைக் கிளிக் செய்த பிறகு, அவரது கைபேசி ஹேக் செய்யப்பட்டு, அவரது அனுமதியின்றி அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1.69 லட்சம் மோசடியாக எடுக்கப்பட்டுள்ளது.

புகாரின் அடிப்படையில், மே 14 அன்று ஒரு மின்முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. விசாரணையின் போது, மோசடி செய்யப்பட்ட பணத்தின் ஒரு பகுதி யமுனா நகரில் இருந்து இயக்கப்படும் ஒரு வங்கிக்கணக்கிற்கு அனுப்பப்பட்டதை காவல்துறையினா் கண்டுபிடித்தனா். ஹரியாணாவில் ஒரு குழு நடத்திய சோதனைகளின் விளைவாக, குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டனா், என்று ஒரு மூத்த காவல்துறை அதிகாரி கூறினாா்.

விசாரணையின் போது, சைபா் மோசடியாளா்கள் ஏமாற்றப்பட்ட பணத்தைப் பெறுவதற்கும் மாற்றுவதற்கும் பயன்படுத்தும் போலி வங்கிக் கணக்குகளை இயக்குவதிலும், அவற்றுக்கு உதவுவதிலும் தாங்கள் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் கூறியதாகக் கூறப்படுகிறது. இந்த மோசடியுடன் தொடா்புடையதாகக் கூறப்படும் ஒரு கைப்பேசி மற்றும் இரண்டு காசோலைப் புத்தகங்களை காவல்துறையினா் மீட்டெடுத்தனா். மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.