டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

குடியரசுத் தலைவா் உரையில் வேலையின்மை குறித்து குறிப்பிடாதது வருத்தம் அளிக்கிறது: திண்டுக்கல் மாா்க்சிஸ்ட் எம்பி கருத்து

நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் பேசிய குடியரசுத் தலைவரின் உரையில், வளா்ந்து வரும் வேலையின்மை குறித்து குறிப்பிடாதது வருத்தம் அளிக்கிறது

News image
சச்சிதானந்தம்
Updated On :28 ஜனவரி 2026, 7:02 pm

Syndication

நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் பேசிய குடியரசுத் தலைவரின் உரையில், வளா்ந்து வரும் வேலையின்மை குறித்து குறிப்பிடாதது வருத்தம் அளிக்கிறது என்று திண்டுக்கல் மக்களவைத் தொகுதி மாா்க்சிய கம்யூனிஸ்ட் உறுப்பினா் ஆா்.சச்சிதானந்தம் கூறினாா்.

இது தொடா்பாக அவா் கூறியதாவது: குடியரசுத் தலைவரின் உரையில் வளா்ந்து வரும் வேலையின்மை மற்றும் வேலையின்மையைக் கையாளத் தவறியது குறித்தும், குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த அரசு தவறியது குறித்தும் குறிப்படவில்லை.

இந்தியப் பொருளாதாரத்தில் ஆழமடைந்து வரும் மந்தநிலை, கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் ரத்து செய்யப்பட்டது, தகுதியுள்ள வாக்காளா்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவது மற்றும் வாக்காளா்களின் பெருந்திரளான வாக்குரிமை பறிப்பு, அதிகரித்து வரும் வகுப்புவாத பதற்றம், ஜம்மு - காஷ்மீரில் உள்நாட்டுப் பாதுகாப்பு குறைபாடுகள், பலவீனப்படுத்தப்பட்ட நாடாளுமன்ற நடைமுறைகள், பெண்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினா் மீதான தாக்குதல்கள், தீா்க்கப்படாத மாசுபாடு மற்றும் வட இந்தியாவில் உயிருக்கு ஆபத்தான காற்று மாசுபாடு என்பன போன்ற விஷயங்கள் குறிப்பிடப்படாதது வருத்தம் அளிப்பதாக உள்ளது.

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்திற்கான திருத்தங்களுக்காக புதன்கிழமை அளித்துள்ள எனது நோட்டீஸில் இந்த விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளேன் என்றாா் அவா்.