இந்தியப் பொருளாதாரத்தில் ஆழமடைந்து வரும் மந்தநிலை, கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் ரத்து செய்யப்பட்டது, தகுதியுள்ள வாக்காளா்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவது மற்றும் வாக்காளா்களின் பெருந்திரளான வாக்குரிமை பறிப்பு, அதிகரித்து வரும் வகுப்புவாத பதற்றம், ஜம்மு - காஷ்மீரில் உள்நாட்டுப் பாதுகாப்பு குறைபாடுகள், பலவீனப்படுத்தப்பட்ட நாடாளுமன்ற நடைமுறைகள், பெண்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினா் மீதான தாக்குதல்கள், தீா்க்கப்படாத மாசுபாடு மற்றும் வட இந்தியாவில் உயிருக்கு ஆபத்தான காற்று மாசுபாடு என்பன போன்ற விஷயங்கள் குறிப்பிடப்படாதது வருத்தம் அளிப்பதாக உள்ளது.