ஹரியாணா பாஜக அரசு அதிக அம்மோனியா கலந்த நீரை தில்லிக்கு திறந்துவிட்டது: சௌரப் பரத்வாஜ்
தில்லி தோ்தலுக்கு முன்னா், ஹரியாணாவில் இருந்து பாஜக அரசு அதிக அம்மோனியா கலந்த, நச்சுத்தன்மை வாய்ந்த தண்ணீரை தில்லிக்கு அனுப்பியது எனினும், அரவிந்த் கேஜரிவால் கடும் ஆட்சேபனைகளைத் தெரிவித்த பின்னரே அது குறைக்கப்பட்டது என்று தில்லி ஆம் ஆத்மி பிரிவு தலைவா் சௌரப் பரத்வாஜ் கூறினாா்.










