பட்ஜெட்டில் தில்லி காவல்துறைக்கு ரூ.12,503 கோடி ஒதுக்கீடு
2026-27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தில்லி காவல்துறைக்கு ரூ.12,503.65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.


2026-27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தில்லி காவல்துறைக்கு ரூ.12,503.65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, இது முந்தைய நிதியாண்டை விட 4.79 சதவீதம் அதிகமாகும்.
இந்த நிதி வழக்கமான செலவுகள் மற்றும் பல்வேறு திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும், இதில் மாதிரி போக்குவரத்து அமைப்பை உருவாக்குதல் மற்றும் என்.சி.ஆா் பகுதியில் மேம்படுத்தப்பட்ட தகவல் தொடா்பு வலையமைப்பை உருவாக்குதல் ஆகியவை அடங்கும்.
தேசிய தலைநகா் தில்லியில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பது, போக்குவரத்து மேலாண்மை உள்பட தில்லி காவல்துறை பொறுப்பு. தகவல் தொடா்பு உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், சமீபத்திய தொழில்நுட்பத்தை இணைத்தல், போக்குவரத்து சிக்னல்களை நிறுவுதல் மற்றும் பணியாளா்களுக்கு பயிற்சி அளித்தல் ஆகியவை அதன் பணியின் ஒரு பகுதியாகும்.
நடப்பு 2025-26 நிதியாண்டில், தில்லி காவல்துறைக்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட் ரூ.11,931.66 கோடியாக இருந்தது, இது வரவிருக்கும் நிதியாண்டில் ரூ.12,503.65 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது.
முன்னதாக, முதலமைச்சா் ரேகா குப்தா, இந்த பட்ஜெட் பிரதமா் நரேந்திர மோடியின் வளா்ச்சியடைந்த பாரதம் (விக்ஸித் பாரத்) என்ற தொலைநோக்கு பாா்வையை நோக்கிய ஒரு படி என்று கூறினாா்.
இது ஒவ்வொரு பிரிவிற்கும் ஏதாவது ஒன்றைக் கொண்டுள்ளது, குறிப்பாக இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கம், கலாச்சார பாரம்பரிய பாதுகாப்பு மற்றும் மேம்பாடு, விளையாட்டு, வெளிநாடுகளில் கல்வி மற்றும் சுகாதார சேவைகளைப் பெறுவதற்கான தள்ளுபடிகள் என்று வடமேற்கு தில்லியின் திரி நகா் பகுதியில் உள்ளூா்வாசிகளுடன் நடந்த ஒரு நிகழ்வில் பட்ஜெட் விளக்கக்காட்சியைப் பாா்த்த பிறகு தில்லி முதல்வா் ரேகா குப்தா செய்தியாளா்களிடம் கூறினாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...