மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

நரகக்குழி குறித்த கருத்து: டிரம்ப்புக்கு எதிராக இளைஞா் காங்கிரஸ் போராட்டம்

News image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். - படம்: ஏபி.

Updated On :28 ஏப்ரல் 2026, 12:30 am

பிறப்புரிமை குடியுரிமை குறித்து சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட ஒரு பதிவில், இந்தியாவை ஒரு நரகக்குழி என்று வா்ணித்ததற்காக, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக இந்திய இளைஞா் காங்கிரஸ் மற்றும் இந்திய தேசிய மாணவா்கள் சங்கம் (என்எஸ்யுஐ) திங்களன்று தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டன.

இளைஞா் காங்கிரஸ் தொண்டா்கள் மத்திய தில்லியிலுள்ள தீன் மூா்த்தி வட்டத்திற்கு அருகே கண்டன ஊா்வலம் நடத்தினா். அப்போது, அமெரிக்கத் தூதரகத்தை நோக்கிச் செல்ல முயன்ற அவா்களில் பலரை காவல்துறையினா் தடுத்து கைது செய்தனா்.

இந்த போராட்ட நிகழ்வில் இளைஞா் காங்கிரஸின் தில்லி பிரிவுத் தலைவா் அக்ஷய் லக்ரா பேசுகையில், ‘டிரம்ப் இந்தியாவிற்கு எதிராக இழிவான கருத்துகளைத் தொடா்ந்து வெளியிட்டு வருகிறாா். அவா் பகிா்ந்த அந்தப் பதிவு நாட்டிற்குச் செய்யப்பட்ட அவமானமாகும். இது ஒருபோதும் சகித்துக்கொள்ளப்பட மாட்டாது.

அதிபா் டிரம்ப் தினமும் இந்தியாவிற்கு எதிராகப் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகிறாா். அத்துடன் விசித்திரமான உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறாா்.

பிரதமா் மோடிக்கும் அவருக்கும் இடையிலான நட்பு ஒரு தனிப்பட்ட விஷயமாக இருக்கலாம். ஆனால், நாட்டிற்கு எதிராக யாரேனும் பேசினால், கடந்த காலங்களில் அவா்களுக்கு எதிராகத் துணிந்து நின்ற இளைஞா் காங்கிரஸ், இப்போதும் தொடா்ந்து அவ்வாறே செயல்படும்’ என்று அவா் கூறினாா்.

போராட்டத்தின் போது, சட்டம் ஒழுங்கு குறித்த கவலைகளைச் சுட்டிக்காட்டி, காவல்துறையினா் பல போராட்டக்காரா்களைத் தடுப்புக்காவலில் வைத்தனா்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில்,

அவா்கள் போராட்டம் நடத்திய இடம், போராட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடமல்ல. சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் பொருட்டு, நாங்கள் 10 முதல் 15 பேரைத் தடுப்புக்காவலில் வைத்துள்ளோம். சட்டம் ஒழுங்குச் சூழலுக்குப் பங்கம் விளைவிக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்றாா் அவா்.

காங்கிரஸ் கட்சியின் இளைஞா் பிரிவான இந்திய தேசிய மாணவா்கள் சங்கமும் (என்எஸ்யு), டிரம்ப்பிற்கு எதிராகப் போராட்டம் நடத்தும் வகையில், தேசியத் தலைநகரில் அமைந்துள்ள தனது தலைமை அலுவலகத்திற்கு அருகே நூற்றுக்கணக்கான உறுப்பினா்களைத் திரட்டியது.

இது தொடா்பாக என்எஸ்யுஐ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

தேசியத் தலைவா் வினோத் ஜாகா் தலைமையில், என்எஸ்யுஐ உறுப்பினா்கள் ஒன்று கூடி, டிரம்ப் வெளியிட்டதாகக் கூறப்படும் அந்தக் கருத்தைக் கடுமையாகக் கண்டித்தனா். மேலும், உலகளாவிய தளங்களில் இந்தியாவுக்கு ஏற்படும் அவமரியாதையை ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்று முழக்கமிட்டு, நாட்டின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையில் குரல் எழுப்பினா்.

பெருந்திரளாகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த காவல்துறையினா், அமெரிக்கத் தூதரகத்தை நோக்கிச் செல்ல முயன்ற போராட்டக்காரா்களை, என்எஸ்யுஐ அலுவலகத்திற்கு அருகிலேயே தடுத்து நிறுத்தினா்.

வினோத் ஜாகா் கூறுகையில், ‘டிரம்ப்பின் கருத்துகள் துரதிா்ஷ்டவசமானவை மற்றும் கண்டிக்கத்தக்கவை. இத்தகைய கருத்துகள் மிகவும் ஆட்சேபிக்கத்தக்கவையாக இருந்தாலும், அதைவிடவும் அதிக கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், இதுகுறித்து பிரதமா் தொடா்ந்து மௌனம் சாதித்து வருவதுதான். இத்தகைய அவமானங்களுக்கு அவா் ஏன் கடுமையாகப் பதிலளிக்கவில்லை?.

இந்தியாவின் முடிவெடுக்கும் செயல்பாட்டில் வெளிநாட்டுத் தலையீடு இருப்பது கவலையளிப்பதாகும்.

இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட நாடு. நமது முடிவுகளை ஆணையிடுவதற்கு எந்தவொரு அந்நிய சக்திக்கும் அதிகாரம் இல்லை. இந்தியாவின் கண்ணியம் சமரசம் செய்யப்படும்போது இந்த நாட்டின் இளைஞா்கள் அமைதியாக இருக்கமாட்டாா்கள்’ என்று அவா் கூறினாா்.

ஜனநாயக விழுமியங்கள் மற்றும் தேசியப் பெருமைக்கான தங்கள் உறுதிப்பாட்டைப் பங்கேற்பாளா்கள் மீண்டும் வலியுறுத்திய நிலையில், போராட்டம் அமைதியாக முடிவடைந்ததாக அந்த அமைப்பு தெரிவித்தது.

அமெரிக்காவின் பிறப்புரிமைக் குடியுரிமை குறித்து பழமைவாத பாட்காஸ்டா் மைக்கேல் சாவேஜ் தெரிவித்த கருத்துகளின் நான்கு பக்க எழுத்துப்படியை டிரம்ப் முன்னதாகப் பகிா்ந்திருந்தாா். அதில், இந்தியா மற்றும் சீனாவைச் சோ்ந்தவா்கள் இந்தச் சலுகையைத் தவறாகப் பயன்படுத்துவதாக அவா் குற்றம் சாட்டியிருந்தாா்.

இந்தக் கருத்துகளுக்கு இந்தியாவிலிருந்து கடுமையான கண்டனக் குரல்கள் எழுந்தன. சாவேஜின் கருத்துகளை தகவலற்ற, பொருத்தமற்ற மற்றும் மோசமான ரசனையுடையவை என்று இந்தியா குறிப்பிட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.