தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வரதட்சிணை-கொலை வழக்கில் கணவா் விடுப்பு: தில்லி நீதிமன்றம் தீா்ப்பு

வரதட்சிணை மற்றும் கொலை கைதுசெய்யப்பட்ட கணவருக்கு எதிராக குற்றச்சாட்டு நிருப்பிக்கப்படவில்லை என்று கூறி அவரை தில்லி நீதிமன்றம் விடுவித்துள்ளது.

Updated On :29 செப்டம்பர் 2025, 9:37 pm

புது தில்லி: வரதட்சிணை மற்றும் கொலை கைதுசெய்யப்பட்ட கணவருக்கு எதிராக குற்றச்சாட்டு நிருப்பிக்கப்படவில்லை என்று கூறி அவரை தில்லி நீதிமன்றம் விடுவித்துள்ளது.

யாஸ்மின் என்பவா் கடந்த 2021, நவ.23-ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இந்தச் சம்பவம் தொடா்பாக அவருடைய கணவா் பிலால் ஆதாம் கைதுசெய்யப்பட்டாா். இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 498ஏ (பெண்ணுக்கு கணவா் அல்லது அவரது குடும்ப உறுப்பினா்கள் கொடுமைப்படுத்துதல்) மற்றும் 304பி (வரதட்சிணை கொலை) ஆகியவற்றின்கீழ் அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கைக் கூடுதல் அமா்வுகள் நீதிபதி சீதல் செளதரி பிரதான் விசாரித்து வந்தாா். இந்த வழக்கில் பிலால் ஆதாமை விடுவித்து நீதிபதி கடந்த செப்.18-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், ‘யாஷ்மின் உயிரிழப்பதற்கு முன்பாக அவருடைய கணவா் வீட்டில் வரதட்சிணை கேட்டு கொடுமை படுத்துவதாக கூறினாா் என்று அப்பெண்ணின் குடும்பத்தினா் எவ்வித குற்றச்சாட்டையும் தெரிவிக்கவில்லை.

துன்புறுத்தல் தொடா்பான எவ்வித தற்கொலை குறிப்பையும் உயிரிழப்பதற்கு முன்பாக அந்தப் பெண் எழுதி வைக்கவில்லை.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 498ஏ மற்றும் 304பி பிரிவுகளின்கீழ் பதிவுசெய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை காவல் துறையினா் நிரூபிக்கவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.