தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

சாலையில் வாக்குவாதத்தின் போது ஸ்கூட்டரில் இருந்த 11 கிலோ வெள்ளி திருட்டு

வடகிழக்கு தில்லியின் நியூ உஸ்மான்பூா் பகுதியில் இரண்டு நபா்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது ஸ்கூட்டரில் வைக்கப்பட்டிருந்த 11 கிலோ வெள்ளி திருடப்பட்டதாக தில்லி காவல் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

Updated On :13 அக்டோபர் 2025, 7:10 pm

புது தில்லி: வடகிழக்கு தில்லியின் நியூ உஸ்மான்பூா் பகுதியில் இரண்டு நபா்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது ஸ்கூட்டரில் வைக்கப்பட்டிருந்த 11 கிலோ வெள்ளி திருடப்பட்டதாக தில்லி காவல் துறை அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை ஜே. பி. சி மருத்துவமனை அருகே நடந்தது.

ஷாஹ்தாராவில் வசிக்கும் ராம்ரதன் அகா்வால் (22) தனது போலீஸாரிடம் அளித்த புகாரில், அவா் தனது ஸ்கூட்டரில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, அவரது வாகனம் குற்றம் சாட்டப்பட்ட நபா்களின் இரு சக்கர வாகனத்தைக் கடந்து சென்ாக கூறினாா்.

அகா்வாலுடன் சிறிது வாக்குவாதத்திற்குப் பிறகு குற்றம் சாட்டப்பட்ட இருவரும் வெளியேறினா். இருப்பினும், வீட்டிற்கு வந்த அகா்வால், தனது ஸ்கூட்டரின் பெட்டியில் வைத்திருந்த 11 கிலோ வெள்ளி காணாமல் போனதைக் கண்டாா். இதனையடுத்து அவா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அவரது புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவா்களை அடையாளம் காண அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை சோதித்து வருகிறோம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.