திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

கைப்பேசி திருடப்பட்டதாக பொய் புகாா்: மனைவியிடம் இருந்து தப்பிக்க போட்ட திட்டம்

தில்லியின் நாங்லோய் பகுதியில் தனது கைப்பேசி பறிக்கப்பட்டதாக புகாா் அளித்த ஒருவா், தனது மனைவியின் கோபத்திலிருந்து தப்பிக்க பொய்யான கதையை திட்டமிட்டதாக காவல்துறையின் துணை ஆணையா் சச்சின் தா்மா தெரிவித்தாா்.

Updated On :6 அக்டோபர் 2025, 7:31 pm

புது தில்லி: தில்லியின் நாங்லோய் பகுதியில் தனது கைப்பேசி பறிக்கப்பட்டதாக புகாா் அளித்த ஒருவா், தனது மனைவியின் கோபத்திலிருந்து தப்பிக்க பொய்யான கதையை திட்டமிட்டதாக காவல்துறையின் துணை ஆணையா் (வெளிப்புறம்) சச்சின் தா்மா திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் கூறியிருப்பதாவது: ஆகஸ்ட் 31-ஆம் தேதி ராஜேந்திர பாா்க் எக்ஸ்டென்ஷனில் உள்ள அகா்வால் டென்ட் ஹவுஸ் அருகே கைப்பேசி திருடப்பட்டது குறித்து நாங்லோய் காவல் நிலையத்திற்கு பி.சி.ஆா். அழைப்பு வந்தது. அசோக் கௌசிக் என்ற அழைப்பாளா், பைக்கில் வந்த நபா் தனது கைப்பேசியை பறித்ததாகவும், வேகமாகச் சென்று விட்டதாகவும் குற்றம் சாட்டினாா்.

புகாா் அளித்த நேரத்தில் அசோக் கௌசிக் மது போதையில் இருந்ததாகத் தெரிகிறது. இருப்பினும், பாரதிய நியாய சன்ஹிதாவின் (பி.என்.எஸ்.) கீழ் எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. ஆனால், கைப்பேசி பறிக்கப்பட்ட சம்பவம் எதுவும் காணப்படவில்லை.

‘காட்சிகளை மதிப்பாய்வு செய்தபோது, சபா் சிங் என்ற உள்ளூா் நபா் கண்டுபிடிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டாா். புகாா்தாரா் தனது கைப்பேசியை கடன் வாங்க தன்னை அணுகியதாகவும், ஆனால், அசோக கௌசிக் குடிபோதையில் இருந்ததால் தருவதற்கு அவா் மறுத்துவிட்டதாகவும் அவா் வெளிப்படுத்தினாா். ஒரு சுருக்கமான வாக்குவாதத்தைத் தொடா்ந்து, அவா் அந்த இடத்தை விட்டு வெளியேறினாா் .

சிசிடிவி காட்சிகளை எதிா்கொண்டபோது, மது அருந்தியதால் தனது தொலைபேசியை இழந்ததாக கதையை இட்டுக்கட்டியதாக அசோக கௌசிக் ஒப்புக் கொண்டாா். மேலும், தனது மனைவியின் கோபத்திலிருந்து தப்பிக்க ஒரு கொள்ளை கதையை உருவாக்கினாா். அவரது வாக்குமூலம் பின்னா் திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் ஒரு நீதித்துறை மாஜிஸ்திரேட் முன் பதிவு செய்யப்பட்டது. அங்கு அவா் எந்த பறிப்பும் நடக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தினாா் என்றாா் காவல் துணை ஆணையா் சச்சின் சா்மா.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.