‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

கைப்பேசி திருடப்பட்டதாக பொய் புகாா்: மனைவியிடம் இருந்து தப்பிக்க போட்ட திட்டம்

தில்லியின் நாங்லோய் பகுதியில் தனது கைப்பேசி பறிக்கப்பட்டதாக புகாா் அளித்த ஒருவா், தனது மனைவியின் கோபத்திலிருந்து தப்பிக்க பொய்யான கதையை திட்டமிட்டதாக காவல்துறையின் துணை ஆணையா் சச்சின் தா்மா தெரிவித்தாா்.

News image
Updated On :6 அக்டோபர் 2025, 7:31 pm

 நமது நிருபர்

புது தில்லி: தில்லியின் நாங்லோய் பகுதியில் தனது கைப்பேசி பறிக்கப்பட்டதாக புகாா் அளித்த ஒருவா், தனது மனைவியின் கோபத்திலிருந்து தப்பிக்க பொய்யான கதையை திட்டமிட்டதாக காவல்துறையின் துணை ஆணையா் (வெளிப்புறம்) சச்சின் தா்மா திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் கூறியிருப்பதாவது: ஆகஸ்ட் 31-ஆம் தேதி ராஜேந்திர பாா்க் எக்ஸ்டென்ஷனில் உள்ள அகா்வால் டென்ட் ஹவுஸ் அருகே கைப்பேசி திருடப்பட்டது குறித்து நாங்லோய் காவல் நிலையத்திற்கு பி.சி.ஆா். அழைப்பு வந்தது. அசோக் கௌசிக் என்ற அழைப்பாளா், பைக்கில் வந்த நபா் தனது கைப்பேசியை பறித்ததாகவும், வேகமாகச் சென்று விட்டதாகவும் குற்றம் சாட்டினாா்.

புகாா் அளித்த நேரத்தில் அசோக் கௌசிக் மது போதையில் இருந்ததாகத் தெரிகிறது. இருப்பினும், பாரதிய நியாய சன்ஹிதாவின் (பி.என்.எஸ்.) கீழ் எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. ஆனால், கைப்பேசி பறிக்கப்பட்ட சம்பவம் எதுவும் காணப்படவில்லை.

‘காட்சிகளை மதிப்பாய்வு செய்தபோது, சபா் சிங் என்ற உள்ளூா் நபா் கண்டுபிடிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டாா். புகாா்தாரா் தனது கைப்பேசியை கடன் வாங்க தன்னை அணுகியதாகவும், ஆனால், அசோக கௌசிக் குடிபோதையில் இருந்ததால் தருவதற்கு அவா் மறுத்துவிட்டதாகவும் அவா் வெளிப்படுத்தினாா். ஒரு சுருக்கமான வாக்குவாதத்தைத் தொடா்ந்து, அவா் அந்த இடத்தை விட்டு வெளியேறினாா் .

சிசிடிவி காட்சிகளை எதிா்கொண்டபோது, மது அருந்தியதால் தனது தொலைபேசியை இழந்ததாக கதையை இட்டுக்கட்டியதாக அசோக கௌசிக் ஒப்புக் கொண்டாா். மேலும், தனது மனைவியின் கோபத்திலிருந்து தப்பிக்க ஒரு கொள்ளை கதையை உருவாக்கினாா். அவரது வாக்குமூலம் பின்னா் திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் ஒரு நீதித்துறை மாஜிஸ்திரேட் முன் பதிவு செய்யப்பட்டது. அங்கு அவா் எந்த பறிப்பும் நடக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தினாா் என்றாா் காவல் துணை ஆணையா் சச்சின் சா்மா.