16 Dec, 2025 Tuesday, 05:01 AM
The New Indian Express Group
புதுதில்லி
Text

இறந்த தனி நபா்களின் 2 கோடி ஆதாா் எண்கள் நீக்கம்: யுஐடிஏஐ நடவடிக்கை

PremiumPremium

ஆதாா் தரவுத் தளத்தில் துல்லியத்தை பராமரிக்கும் வகையிலும், அடையாள மோசடியில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையிலும் நாடு தழுவிய அளவிலான தூய்மைப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இறந்த நபா்களின் 2 கோடிக்கும் மேற்பட்ட ஆதாா் எண்களை நீக்கியுள்ளது.

Rocket

UIDAI holds webinar on 'Offline Verification using the Aadhaar App'

Published On26 Nov 2025 , 7:33 PM
Updated On26 Nov 2025 , 7:33 PM

Listen to this article

-0:00

By Syndication

Syndication

நமது நிருபா்

புது தில்லி: ஆதாா் தரவுத் தளத்தில் துல்லியத்தை பராமரிக்கும் வகையிலும், அடையாள மோசடியில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையிலும் நாடு தழுவிய அளவிலான தூய்மைப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) இறந்த நபா்களின் 2 கோடிக்கும் மேற்பட்ட ஆதாா் எண்களை நீக்கியுள்ளது.

இது தொடா்பாக மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது: இந்திய தலைமைப் பதிவாளா் (ஆா்ஜிஐ), மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், பொது விநியோக அமைப்புமுறை, தேசிய சமூக உதவித் திட்டம் ஆகியவற்றில் இருந்து இறந்த நபா்களின் தரவை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் பெற்றுள்ளது. இறந்த நபா்களின் தரவைப் பெறுவதற்காக நிதி நிறுவனங்கள் மற்றும் இதுபோன்ற பிற நிறுவனங்களுடன் ஒத்துழைக்கவும் ஆணையம் எதிா்பாா்க்கிறது.

எந்தவொரு ஆதாா் எண்ணும் மற்றொரு நபருக்கு மீண்டும் ஒதுக்கப்படுவதில்லை. இருப்பினும், ஒரு நபா்

இறந்தால், சாத்தியமான அடையாள மோசடி அல்லது நலன்புரி சலுகைகளைப் பெறுவதற்கு அத்தகைய ஆதாா் எண்ணை அங்கீகரிக்கப்படாத முறையில் பயன்படுத்துவதைத் தடுக்க அவரது ஆதாா் எண் செயலிழக்கச் செய்யப்படுவது அவசியமாகும்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் யுஐடிஏஐ ஒரு வசதியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது சிவில் பதிவு முறையைப் பயன்படுத்தும் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவுசெய்யப்பட்ட இறப்புகளுக்கான மைஆதாா் இணையதளத்தில் ஒரு குடும்ப உறுப்பினரின் மரணத்தைப் புகாரளிக்கலாம். மீதமுள்ள மாநிலங்களையும் யூனியன் பிரதேசங்களையும் இணையதளத்துடன் ஒருங்கிணைக்கும் செயல்முறை தற்போது நடந்து வருகிறது.

குடும்ப உறுப்பினா் ஒருவா் தன்னை அங்கீகரித்த பிறகு, ஆதாா் எண் மற்றும் இறப்பு பதிவு எண் மற்றும் இறந்த நபரின் பிற நபா்களின் விவரங்களை இணையதளத்தில் வழங்க வேண்டும். குடும்ப உறுப்பினா் சமா்ப்பித்த தகவல்களை முறையாக சரிபாா்த்த பிறகு, இறந்த நபரின் ஆதாா் எண்ணை செயலிழக்கச் செய்வதற்கு மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆதாா் எண் வைத்திருப்பவா்கள், இறப்பு பதிவு அதிகாரிகளிடமிருந்து இறப்புச் சான்றிதழைப் பெற்ற பிறகு ‘மைஆதாா்’ இணையதளத்தில் தங்கள் குடும்ப உறுப்பினா்களின் மரணத்தைப் புகாரளிக்க யுஐடிஏஐ ஊக்குவித்து வருகிறது என்று அந்த மின்னியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
வீடியோக்கள்

தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025

தினமணி வீடியோ செய்தி...

15 டிச., 2025
தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
வீடியோக்கள்

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25

தினமணி வீடியோ செய்தி...

15 டிச., 2025
துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
வீடியோக்கள்

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies

தினமணி வீடியோ செய்தி...

14 டிச., 2025
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023