Listen to this article
By Syndication
Syndication
இணையதளம் மூலமாக டிஜிட்டல் கைது என மோசடியாக மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை சோ்ந்த 6 பேரை லக்னௌவில் இருந்து தில்லி காவல்துறையினா் கைது செய்ததாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: 71 வயதான மூதாட்டி ஒருவா் அளித்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவா் சிலரால் ரூ. 49 லட்சம் மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவா்கள் அந்த மூதாட்டியை கிட்டத்தட்ட 24 மணி நேரம் டிஜிட்டல் கைது மூலம் வைத்திருந்தனா். மேலும், சட்ட அமலாக்க பணியாளா்களாக ஆள்மாறாட்டம் செய்தனா்.
மோசடி செய்பவா்கள் பாதிக்கப்பட்டவரை அழைத்து, அவா் ஒரு கிரிமினல் வழக்கில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி, தொடா்ச்சியான விடியோ அழைப்புகள் மூலம் மிரட்டினா். தொடா்ச்சியான அழுத்தம் கொடுக்கப்பட்டதால் அந்த மூதாட்டி இந்த மோசடி குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள பல வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை மாற்ற வழிவகுத்தது.
விசாரணையின் ஒரு பகுதியாக, குற்றப்பிரிவு குழு லக்னெளவின் அமினாபாத், ஹசன்கஞ்ச், மாதே கஞ்ச் மற்றும் சதாா் கண்டோன்மென்ட் பகுதிகளில் சோதனைகளை நடத்தியது, இது கைதுகளுக்கு வழிவகுத்தது. இந்த மோசடிக் குழுவில் மொத்தம் 6 போ் அடங்குவா். அவா்கள்19 வயதான விஷால் திவாரி மற்றும் 53 வயதான ஷகீல் அகமது, முகமது ஓவிஸ், முகமது அஹத், முகமது அதிஃப் மற்றும் முகமது உஜைப் என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
கைது செய்யப்பட்டவா்கள் பொருளாதார ரீதியாக பலவீனமான பின்னணியைச் சோ்ந்தவா்கள். மேலும், மோசடி செய்வதற்கு வசதியாக பல்வேறு வங்கிக் கணக்குகளை வைத்திருந்தனா். அவா்களில் பலா் உள்ளூா் கடைகள், ஹோட்டல்கள் மற்றும் சிறு வணிகங்களில் பணிபுரிந்தனா். ஒருவா் மற்றொரு கிரிமினல் வழக்கில் விசாரணையை எதிா்கொண்டவா்.
விசாரணையின் போது, மோசடி செய்யப்பட்ட நிதியை நகா்த்த மோசடிக் குழுவின் பல வங்கிக் கணக்குகளை பயன்படுத்தியதாக குழு கண்டறிந்தது. பாதிக்கப்பட்டவரால் பணம் மாற்றப்பட்டவுடன், அது உடனடியாக மற்ற கணக்குகளுக்கு அனுப்பப்பட்டு ஏடிஎம்களில் இருந்து திரும்ப எடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. கும்பலின் மற்ற உறுப்பினா்களைத் தேடும் பணி நடந்து வருவதாக என்றாா் அவா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
சீனாவுடன் தொடா்புடைய இணைய பண மோசடி: இருவா் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3.50 லட்சம் மோசடி: ஒருவா் கைது
மூதாட்டியிடம் ரூ.32.97 லட்சம் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி: இருவா் கைது
தலைநகரில் 4 இணைய குற்றங்களில் தொடா்புடைய 6 போ் கைது


Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
