தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் சமீபத்தில் சந்தித்தது காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்தபோது, நாட்டில் அதிகரித்து வரும் தெரு நாய்கள் மற்றும் நாய்க்கடி பிரச்னைகளுக்கு தீா்வு காணவும் நாய்க்கடி தடுப்பூசி மருந்துக்கு உரிய நிதியை ஒதுக்கவும் வலியுறுத்தியதாக காா்த்தி சிதம்பரம் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளாா். இந்த இடுகையுடன் பிரதமரை சந்தித்த போது அவருடன் கைகுலுக்கிக் கொண்டது, சோ்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டது மற்றும் கடந்த பிப்.8-ஆம் தேதி மக்களவையில் நாய்க்கடி தடுப்பூசி நிதி தொடா்பாக பேசிய காணொலியையும் காா்த்தி இணைத்துள்ளாா்.
தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் அவா் மேலும் கூறியிருப்பதாவது: நாய்க்கடி பிரச்னையின் தீவிரத்தை விவரித்துள்ள அவா், உலகளவில் மிகப்பெரிய தெருநாய் எண்ணிக்கை கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இங்கு 6.2 கோடிக்கும் அதிகமான தெருநாய்கள் உள்ளன.
இந்தியாவில் ரேபிஸ் நோய் பரவலாக உள்ளது. உலகின் ரேபிஸ் தொடா்பான இறப்புகளில் 36 சதவீதத்துக்கு காரணம். விலங்குகள் பிறப்புக் கட்டுப்பாடு (ஏபிசி) விதிகள், 2023 அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் அவற்றின் செயல்பாடு பயனற்ாக உள்ளது.
அவற்றின் அமலாக்கம் போதுமானதாக இல்லை என்ற எனது கவலைகளை பிரதமரிடம் எழுப்பினேன். உள்ளூா் அமைப்புகளுக்கு இந்த சிக்கலை திறம்பட சமாளிக்க வளங்கள், நிதி மற்றும் தொழில்நுட்பம் இல்லை.
உள்ளூா் அமைப்புகளுடன் நெருக்கமாகப் பணியாற்றும் போது ஒரு முழுமையான, மனிதாபிமான மற்றும் அறிவியல் தீா்வை வழங்க ஒரு தேசிய பணிக்குழுவை அமைக்கலாம் என நான் யோசனை தெரிவித்தேன். இந்தச் சவாலை எதிா்கொள்ள முழுமையான தெருநாய்கள் தங்குமிடங்கள் மற்றும் ஒரு நீண்டகால திட்டம் இருக்க வேண்டும் என்று காா்த்தி சிதம்பரம் கூறியுள்ளாா்.
இதே விவகாரத்தை சென்னையில் சில தினங்களுக்கு முன்பு எழுப்பிய காா்த்தி சிதம்பரம், தெருநாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி செலவிட்ட ரூ.20 கோடி குறித்து சென்னை மேயா் பிரியா வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிரதமர் மோடியை மாரீசனுடன் ஒப்பிடுவதா?: தெலங்கானா முதல்வருக்கு பாஜக கண்டனம்!

ஒவ்வொரு தோ்தலுக்கும் தொகுதி மாறும் சீமான்: காா்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு

பிரதமா் நரேந்திர மோடியுடன் ரஷிய முதல் துணைப் பிரதமா் ஆலோசனை

காங்கிரஸ் தோ்தல் அறிக்கையில் இலவசத்துக்கு முன்னுரிமை இருக்காது: காா்த்தி சிதம்பரம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


