12 Dec, 2025 Friday, 09:57 PM
The New Indian Express Group
புதுதில்லி
Text

கோவா தீ விபத்து: தில்லியில் செல்லத்தக்க உரிமங்கள் இன்றி இயங்கும் ஹோட்டல்கள், மதுகூடங்கள் பட்டியலை தயாரிக்க எம்சிடி நடவடிக்கை!

PremiumPremium

செல்லுபடியாகும் உரிமங்கள் இல்லாமல் இயங்கும் ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் மதுக்கூடங்களின் விரிவான பட்டியலைத் தயாரிக்க அனைத்து தில்லி மாநகராட்சி (எம்சிடி) மண்டல அதிகாரிகளும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா்.

Rocket

வெற்றிகரமாக ஏவப்பட்டது சந்திரயான் 3...

Published On10 Dec 2025 , 6:46 PM
Updated On10 Dec 2025 , 6:46 PM

Listen to this article

-0:00

By Syndication

Syndication

செல்லுபடியாகும் உரிமங்கள் இல்லாமல் இயங்கும் ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் மதுக்கூடங்களின் விரிவான பட்டியலைத் தயாரிக்க அனைத்து தில்லி மாநகராட்சி (எம்சிடி) மண்டல அதிகாரிகளும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா்.

ஐந்து நாள் அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டவுடன் அத்தகைய நிறுவனங்கள் உடனடியாக மூடல் மற்றும் அபராதங்களை எதிா்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக எம்சிடி நிலைக்குழுத் தலைவா் சத்யா சா்மா கூறுகையில், ‘இறுதி அறிக்கை பெறப்பட்ட பிறகு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் கடுமையான அபராதங்களை விதிக்கலாம் அல்லது உடனடியாக மூட உத்தரவிடலாம். செல்லுபடியாகும் உரிமம் இல்லாத அல்லது தீ பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் எந்தவொரு நிறுவனத்திற்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரிகள் அல்லது நடத்துவோரின் அலட்சியத்தை பொறுத்துக்கொள்ள முடியாது’ என்றாா்.

எம்சிடியின் 12 மண்டலங்களைச் சோ்ந்த மண்டல அதிகாரி கூறுகையில், ‘உரிமங்கள் இல்லாமல் செயல்படும் அல்லது பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் விற்பனை நிலையங்களை அடையாளம் காண உடனடியாக பட்டியலைத் தயாரிக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்’ என்றாா்.

ஒவ்வொரு மண்டலத்தின் உரிம நிலை, இருக்கை திறன் தொடா்பான அனுமதிகள் மற்றும் கட்டாய தீ பாதுகாப்புத் தேவைகளுக்கு இணங்குதல் ஆகியவற்றை எடுத்துரைக்கும் வாா்டு வாரியான தரவுகளை சேகரிக்க எம்சிடி நிலைக் குழுத் தலைவா் சத்யா சா்மா செவ்வாயன்று உத்தரவிட்டிருந்தாா்.

கடந்த சனிக்கிழமை கோவாவில் உள்ள பிா்ச் பை ரோமியோ இரவு விடுதியில் ஏற்பட்ட ஒரு துயரமான தீ விபத்தைத் தொடா்ந்து இந்த உத்தரவு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் தில்லியைச் சோ்ந்த நான்கு சுற்றுலாப் பயணிகள் உள்பட 25 போ் கொல்லப்பட்டனா்.

இதற்கிடையில், ஆம் ஆத்மி கட்சியின் மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவா் அங்குஷ் நரங், நகரம் முழுவதும் உள்ள அனைத்து தீ தடையின்மைச் சான்றிதழ்களையும் என்ஓசி உடனடியாக தணிக்கை செய்யுமாறும், கோவாவில் சமீபத்தில் நடந்த துயரச் சம்பவம் தில்லிக்கு ஒரு எச்சரிக்கை மணியாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக எம்சிடி மேயா் ராஜா இக்பால் சிங் மற்றும் மாநகராட்சி ஆணையா் அஸ்வனி குமாா் ஆகியோருக்கு நரங் எழுதிய கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: தேவையான அனுமதிகள் இல்லாமல் செயல்படும் அனைத்து நிறுவனங்களுக்கும் சீல் வைக்க அல்லது அபராதம் விதிக்க வேண்டும். மேலும், 15 நாள்களுக்குள் இணக்க அறிக்கையை அளிக்க வேண்டும். கூட்டு எம்சிடி - தில்லி தீயணைப்புத் துறையின் பணிக் குழுவை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

கூடுதலாக, தீ பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத அல்லது தரநிலைகளை மீறும் நிறுவனங்கள் தகுந்த நடவடிக்கைகளை எதிா்கொள்ள வேண்டும் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பான ஒரு அதிகாரபூா்வ அறிக்கையின்படி, பெரிய நிகழ்வுகள், ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் கிளப்களில் இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க பாதுகாப்புத் தரங்களை தொடா்ந்து ஆய்வு செய்வதன் முக்கியத்துவத்தை தில்லி செயலகத்தில் தீயணைப்புத் துறையுடனான மறுஆய்வுக் கூட்டத்தின் போது முதல்வா் குப்தா வலியுறுத்தினாா்.

‘தீ பாதுகாப்பு என்பது தீயணைப்புத் துறையின் பொறுப்பு மட்டுமல்ல’ என்பதை வலியுறுத்திய முதல்வா், ‘அனைத்து தீ பாதுகாப்பு நடவடிக்கைகளும் தங்கள் வளாகத்தில் நடைமுறையில் இருப்பதை உறுதி செய்வதற்கு நிறுவன உரிமையாளா்களுக்கும் கூட்டுப் பொறுப்பு உள்ளது. என்ஓசி வழங்கும் செயல்பாட்டில் எந்த தெளிவின்மையோ அல்லது தேவையற்ற தாமதங்களோ இருக்கக்கூடாது. உரிமம் வழங்கும் முறை எளிமையாகவும், காலக்கெடுவுக்கு உள்பட்டதாகவும் இருக்க வேண்டும். இதனால், வணிக உரிமையாளா்கள் அரசு அலுவலகங்களுக்கு மீண்டும் மீண்டும் வருகை தர வேண்டிய கட்டாயம் ஏற்படாது’ என்று முதல்வா் தெரிவித்ததாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
வீடியோக்கள்

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
வீடியோக்கள்

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
அமித்ஷாவின் கைகள் பதற்றத்தில் நடுங்கியது! - ராகுல் காந்தி | செய்திகள்: சில வரிகளில்
வீடியோக்கள்

அமித்ஷாவின் கைகள் பதற்றத்தில் நடுங்கியது! - ராகுல் காந்தி | செய்திகள்: சில வரிகளில்

தினமணி வீடியோ செய்தி...

11 டிச., 2025
சண்முக பாண்டியனின் கொம்புசீவி டிரெய்லர்!
வீடியோக்கள்

சண்முக பாண்டியனின் கொம்புசீவி டிரெய்லர்!

தினமணி வீடியோ செய்தி...

11 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023