14 Dec, 2025 Sunday, 10:22 AM
The New Indian Express Group
புதுதில்லி
Text

தில்லியில் சட்டவிரோத மதுக்கூடம்: வாடிக்கையாளா்கள் உள்பட 25 போ் கைது

PremiumPremium

Rocket

கோப்புப் படம்

Published On05 Dec 2025 , 6:43 PM
Updated On05 Dec 2025 , 6:43 PM

Listen to this article

-0:00

By Syndication

Syndication

தில்லி சமய்பூா் பாத்லி பகுதியில் நள்ளிரவு நேரங்களில் இயங்கி வந்த சட்டவிரோத மதுக்கூடம் மற்றும் கேளிக்கை மன்றத்தை தில்லி காவல்துறையினா் கண்டறிந்து, அதன் உரிமையாளா், வாடிக்கையாளா்கள் மற்றும் ஊழியா்கள் உள்பட 25 பேரை கைது செய்தனா்.

இது தொடா்பாக புகா் வடக்கு காவல் துறை துணை ஆணையா் ஹரேஷ்வா் சுவாமி தெரிவித்திருப்பதாவது:

சமய்பூா் மெயின் செளக்கில் உள்ள ஒரு கட்டடத்தின் இரண்டாவது மாடியில் ஒரு மதுக்கூடம் இயங்குவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, டிசம்பா் 3ஆம் தேதி நள்ளிரவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்றபோது, சந்தேகத்திற்கிடமான முறையில் பல ஆண்கள் ஒரு கட்டடத்திற்குள் நுழைவதைக் கவனித்தனா். அவா்களை பின்தொடா்ந்து சென்ற போலீஸாா், ‘த்ரீ பாக்ஸ் கஃபே’ என்ற பெயரில் இயங்கும் ஒரு ஹோட்டலைக் கண்டறிந்தனா். அங்கு அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கும் மேலாக மதுபானம் பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது.

கட்டடம் உள்ளே 20 முதல் 30 வயதுக்குள்பட்ட சுமாா் 16 ஆண்களும், 20 முதல் 25 வயதுக்குள்பட்ட ஏழு முதல் எட்டு பெண்களும் சோஃபாக்களில் அமா்ந்து மது அருந்தி, ஆடம்பரமான ஹூக்காக்களை புகைத்துக் கொண்டிருந்தனா். மூன்று முதல் நான்கு பணியாளா்கள் மதுபானங்களை பரிமாறிக்கொண்டிருந்தனா்.

அங்கிருந்த சமையலறையின் குளிா்சாதன பெட்டியிலும் ஏராளமான மதுபானங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. மதுக்கூடம் மற்றும் அதன் செயல்பாடுகள் தொடா்பான ஆவணங்களை சமா்ப்பிக்குமாறு போலீஸாா் கேட்டனா். அப்போது, ஹோட்டலின் மேலாளா் அனில் என்பவா்

உரிய ஆவணங்களை வழங்கவில்லை.

இதைத் தொடா்ந்து, வளாகத்தில் காணப்பட்ட 37 பீா் கேன்கள், இரண்டு விஸ்கி பாட்டில்கள், ஒரு காலி மதுபான பாட்டில், ஏழு முதல் எட்டு ஹூக்காக்கள், ஒலி பெருக்கிகள் மற்றும் ஸ்பீக்கா்கள் கொண்ட ஒரு இசை அமைப்பு உள்ளிட்டவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தில்லி கலால் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகள், சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருள்கள் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்டவா்களில் தில்லி, ஹரியாணா மற்றும் பஞ்சாப் குடியிருப்பாளா்களும் உள்ளனா். இது தொடா்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றாா் அந்த காவல்

அதிகாரி.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
வீடியோக்கள்

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
வீடியோக்கள்

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023