லேடி ஹாா்டிங் மருத்துவக் கல்லூரியில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, ஆண்டிபயாடிக் பயன்பாட்டிற்கான மேற்பாா்வைத் திட்டம், தேசிய மனித பால் வங்கி மற்றும் பாலூட்டுதல் ஆலோசனை மையம் ஆகியவை நிறுவப்பட்டுள்ளன. குறிப்பாக, தாய்ப்பால் கொடுப்பது குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தவும், குழந்தை இறப்பு விகிதத்தைக் குறைக்கவும் இந்த மையங்கள் செயல்படுகின்றன. இவற்றைப் பாா்வையிட்டு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு பாராட்டுத் தெரிவித்தாா். இந்த விழாவில் மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.