பெண்கள் இன்று அலுவலகம் சென்று பலதிறப்பட்ட ஆண்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டிய சூழல் நிலவுகிறது. அப்படியான சந்தர்பங்களில் பெண் என்பதற்காக ஆண்கள் நம்மை முடக்க நினைக்கும் போது, என்னை தங்கையாக நினைத்துக் கொள்ளுங்கள், அக்கா, அம்மாவாக, மகளாக நினைத்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் கெஞ்சவேண்டிய அவசியமில்லை. ஏனெனில், பெரும்பாலான ஆண்கள் அப்படியெல்லாம் நினைப்பதில்லை என்பதே நிதர்சனம். அதே போல அந்த ஆண்களையும் அண்ணனாக, தம்பியாக, அப்பாவாக நினைத்துக் கொண்டு சமரசம் செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. நியாயப்படி அலுவலகத்தில் ஆண்கள், பெண்கள் என்ற ஏற்றத்தாழ்வெல்லாம் பார்க்கக் கூடாது. எல்லோரும் சமம் எனும்போது அவர்களை சக ஊழியர்களாகக் கருதி, அதற்குண்டான மரியாதையை அளித்தால் போதும். அதுவே பணியிடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யக்கூடும்.
- என்றார்.