விவாகரத்துக்கு ஏனைய காரணங்களாக; கணவர்களின் குடிப்பழக்கம், புகைப்பழக்கம், மனைவியின் மீதான வன்முறைகள் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியை அடித்து உதைப்பது, வார்த்தைகளால் குதறுவது, குழந்தைகளை அடித்துச் சித்ரவதை செய்வது, வரதட்சிணை கொடுமை, கணவன் அல்லது மனைவியின் தீர்க்கவே முடியாத உடல்நலக் கோளாறுகள், தீராத வியாதி, இருசாரரிடையே நிலவும் மலட்டுத்தன்மை, தாம்பத்யத்தில் ஈடுபாடின்மை என்பன போன்ற காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. இத்தனை காரணங்களும் திருமண பந்தத்தை உடைப்பதற்கான சட்டப்பூர்வமான அங்கீகாரம் பெறுவதற்கான காரணிகள். இவற்றில் ஏதாவதொன்றை நிரூபிக்கப் போதுமான ஆதாரங்கள் இருப்பின் மனமொத்து வாழ முடியாத தம்பதிகள் சட்டப்பூர்வமாகப் பிரிந்து வாழ கோர்ட் அனுமதி வழங்கும்.