நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

நீங்கள் சாப்பாட்டுப் ப்ரியரா? இதையெல்லாம் முதலில் தெரிந்து கொள்ளுங்கள்!

தினமும் மூன்று வேளை அல்லது எத்தனை வேளை வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

News image
Updated On :1 ஜூன் 2018, 6:36 am

தினமும் மூன்று வேளை அல்லது எத்தனை வேளை வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால் எப்படி சாப்பிட வேண்டும் என்பது மிகவும் முக்கியம். சாப்பிட உட்காரும் பொழுதிலிருந்து சாப்பிட்டுக் கைகளை கழுவும் வரை சில நடைமுறைகள் கடைப்பிடிப்பது நல்லது.

சாப்பிடும் முன் முதலில் கை, கால், வாய் ஆகியவற்றை தண்ணீரில் கழுவ வேண்டும். காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே சாப்பிடத் தொடங்கிவிட வேண்டும்.

Story image

உங்களுக்கு வயிற்றுப் பொருமல் இருந்தாலோ பசி இல்லாத நிலையிருந்தாலோ சாப்பிட வேண்டாம். எப்போது நன்றாக பசிக்கிறதோ அப்போது சாப்பிட்டால் போதும். 

சாப்பாடு பரிமாறுபவர்கள் இலை அல்லது தட்டில் முதலில் காய்கறிகளோ, அப்பளமோ உப்போ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக் கூடாது. 

Story image

சாப்பிடும் போது சத்தமாகப் பேசக் கூடாது, முடிந்தால் மெளனமாக சாப்பிடுதல் நல்லது. புத்தகங்களைப் படிக்கக் கூடாது. டிவி மொபைல் ஆகியவற்றை நோக்காமல் தட்டைப் பார்த்து ரசித்து ருசித்து நன்றாக மென்று உணவை உட்கொள்ள வேண்டும்.

சாப்பிடுகையில் இடது கையை கீழே ஊன்றியபடி சாப்பிடக்கூடாது.

செருப்பு அல்லது ஷூ அணிந்தபடி சாப்பிடக் கூடாது.

அந்தி சந்தி வேளைகளில் சாப்பிடக் கூடாது. அதாவது காலையில் சூரிய உதயத்தின் போதும், மாலையில் அது மறையும் போதும் உணவினைத் தொடக் கூடாது.

உணவு உண்ணும் போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும். தயவுசெய்து வலைத்தளம், செல்ஃபோன் உள்ளிட்ட சாதனங்கள் அப்போது வேண்டாமே!

இருட்டிலோ, நிழல்படும் இடங்களிலோ சாப்பிடக் கூடாது. சாப்பிடும் போது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து உட்கார்ந்து சாப்பிடக் கூடாது.

Story image

வெளிநாட்டவரிடமிருந்து நாம் பழகிய பஃப்பே சிஸ்டம் ஒத்துவராது. ஒருபோதும் நின்று கொண்டு சாப்பிடவே கூடாது.

உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருக்கும் போதோ, கோபமான மனநிலையிலோ உணவை சாப்பிடாதீர்கள். அது உடல்நலத்துக்கு கேடு.

சாப்பிடும்போது தட்டை மடியில் வைத்துக் கொண்டும், படுத்துக் கொண்டும் சாப்பிடக் கூடாது. தட்டை கையில் ஏந்தியபடி சாப்பிடாதீர்கள். தரையில் வட்டிலை வைத்து சாப்பிடுவதே நல்லது.

Story image

தட்டை வழித்துச் சாப்பிடுவதும், விரலில் ஒட்டிக் உள்ளதை நக்கி சாப்பிடுவதும் நாகரிகமான செயல் அல்ல. மேலும் சாப்பிடும் போது உணவு ருசியாக இருக்கிறதே என்று அதிகமாக சாப்பிடக் கூடாது. வயிறு புடைக்க மூச்சு முட்ட ஒருபோதும் சாப்பிடக் கூடாது. 

சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்த பின்னரே பழங்களை சாப்பிட வேண்டும். உணவுடன் ஒரே நேரத்தில் பலவித பழங்களைச் சேர்த்து ஒன்றாகச் சாப்பிடக் கூடாது. 

எச்சில் தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவு பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது. 

இரவு நேரத்தில் கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய், இஞ்சி, முட்டை மற்றும் செரிமானம் ஆக கடினமான உணவுப் பொருட்கள் எதையும் சாப்பிடக் கூடாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.