நம்மூரில் இந்த நடைமுறை வழக்கத்தில் இருக்கிறதா எனத்தெரியவில்லை. ஆனால், சீனாவில் கொடிய விஷம் கொண்ட பாம்பில் இருந்து மருத்துவ குணம் மிகுந்த ஒயின் தயாரிப்பது வழக்கமான நடைமுறை. ஆனாலும் சீன அரசு, இந்த நடைமுறைக்கு தடை விதித்துள்ளது. அப்படியான நிலையில் 21 வயது சீனப்பெண் ஒருவர், இ - காமர்ஸ் மூலமாக குவாங்டாக்கில் இருந்து செயல்படும் ஸுவான்ஸுயான் எனும் ஆன்லைன் போர்ட்டல் மூலமாக கொடிய விஷம் கொண்ட பாம்பு ஒன்றை விலைக்கு வாங்கினார். குவாங்டாக்கில் இந்த வகைப் பாம்புகள் அதிக அளவில் இருப்பதால் அங்கே அதன் விற்பனை அமோகமாக நடைபெறுவது வழக்கம். ஆன்லைன் மூலமாக விலைக்கு வாங்கப்பட்ட விஷப்பாம்பு உள்ளூர் கூரியர் மூலமாக அந்தப் பெண்ணுக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளது. தாங்கள் டெலிவரி செய்தது விஷப்பாம்பு என்று தெரியாமலே அவர்கள் அதை பெண்ணின் முகவரிக்கு டெலிவரி செய்திருக்கிறார்கள். அப்படித்தான் சீனாவின் Xinhua news Agency கூறுகிறது.