இவரும், இவரது குடும்பத்தினரும் தொடர்ந்து பல வருடங்களாக மழைநீரை மட்டுமே அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பல ஆண்டுகளாக மழைநீரை சேமித்து வைத்துக் கொண்டு, அவற்றைத் தேதியிட்டு பத்திரப்படுத்தி இவர்கள் தங்களது அன்றாடத் தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். மழைநீர் மிகவும் சுத்தமானது என்பதோடு, அதை வடிகட்டி பாத்திரங்களில் சேமித்து வைத்துக் கொண்டு பயன்படுத்தினால் அதிக மழைப்பொழிவுக் காலங்களில் இப்படி சேமிக்கக் கூடிய குடிநீரானது கிட்டத்தட்ட 6 மாதங்கள் வரை தங்களது குடும்பத்தின் அன்றாடத்தேவைகளை நிறைவேற்றப் போதுமானதாக இருப்பதாக தேவராஜும், அவரது மனைவியும் கூறுகின்றனர்.