ரிடையர்மெண்டுக்குப் பிறகு ...
புதுப் புது அர்த்தங்கள்’ படத்து பூர்ணம் விஸ்வநாதன், சவுகார் ஜானகி ஜோடியைப் போல அத்தனை சுவாரஸ்யமாய் வாழ்ந்து முடிக்கா விட்டாலும் கூட குறைந்த பட்சம் வாழ்வின் சின்னஞ்சிறு ஆசைகளையாவது மிஸ் பண்ண கூடாதே!


ரிடையர்மெண்டுக்குப் பிறகு;
என்னென்னவோ செய்யலாம்?
மனமுவந்தும், மனத் திருப்தியோடும் செய்வதற்கு எத்தைனையோ விசயங்கள் இருக்கின்றன.
ஆனால் அவையெல்லாம் அவரவர் மனதளவில் நின்று போகின்றன. பின்பு நடப்பதெல்லாம்;
ஆண்கள்/ பெண்கள் என்ற வேறுபாடின்றி ரிடையர்டு ஆன எல்லோருமே ஒரு குறுகிய வாழ்க்கை வட்டத்தில் சிக்குண்டு மீள முடியாதவர்களாகிப் போகிறார்கள்
இது தான் ரிடையர்மெண்ட் வாழ்க்கையா?
அன்பான பெரியோர்களே, தாய்மார்களே...
உங்கள் மனதைக் கொஞ்சம் ரீவைண்ட் செய்து பாருங்களேன், பரபரப்பாய் வேலைக்குப் போய்க் கொண்டிருந்த காலகட்டத்தில் ரிடையர்மெண்டுக்குப் பிறகான நாட்களில் வாழ்வை ரசிக்க பிரமாதமாய் என்னவெல்லாம் திட்டம் போட்டீர்கள் என்று? அதெல்லாம் புஸ்வாணமாய்ப் போவதேன்?!
என் அம்மா பள்ளி ஆசிரியையாக இருந்து ரிடையர் ஆனவர். அம்மா ரிடயர்மெண்டுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பே வீட்டுக்கு வெளியே அம்மிக்கல்லும், ஆட்டுக்கல்லும் வாங்கிக் கொண்டு வந்து போட்டுக் கொண்டார். “ஏம்மா... அதான் கிரைண்டர், மிக்ஸில்லாம் இருக்கே? இது எதுக்கு? என்றதற்கு; ’இல்லை நான் ரிடையர்ட் ஆனதுக்கு அப்புறமா கிரைண்டர், மிக்ஸி யூஸ் பண்றதைக் குறைச்சிட்டு இனிமே நம்ம பழைய வாழ்க்கை முறைப்படி அம்மிக்கல்லும், ஆட்டுகல்லில் அரைத்துத் தான் சமைக்கப் போறேன்; அதான் ஹெல்த்தியானது, பிடிச்சதை ருசிச்சு சாப்பிட்டு வாழ்க்கையை அதன் போக்கில் ரசிச்சு வாழப் போறேன்” என்றார்.
இந்தப் பதில் நான் எதிர்பாராதது... ஆனால் சந்தோசமாக இருந்தது.
சில மாதங்கள் கடந்தன.
அடுத்த முறை அம்மா வீட்டுக்குப் போகும் போது பார்த்தால் வீட்டுக்கு வெளியே அம்மிக் கல்லும், ஆட்டுக்கல்லும் போட்டது போட்டபடி புதுக் கருக்கு மாறாமல் அப்படியே இருந்தன. அதில் மாவரைத்த சுவடே இல்லை. என்னாச்சும்மா? என்றதற்கு “ஆசையா தான் வாங்கிப் போட்டேன், ஆனா முடியலம்மா... மூட்டு வலி பாடாய் படுத்துது, குனிஞ்சு உட்கார்ந்து அரைக்க முடியல... வீடுன்னு இருந்தா சாஸ்திரத்துக்கு அம்மியும், ஆட்டுக்கல்லும் இருக்கணும், இருந்துட்டுப் போகட்டும்... அவ்வளவு தான்” என்றார்.”
அம்மாவைப் பார்க்க பாவமாய் இருந்தது. ”ம்மா மூட்டு வலி சரியானதும் அரைக்கலாம்மா” என்று சொல்லத்தான் ஆசை, ஆனால் பெரும்பாலான அம்மாக்களுக்கு மூட்டு வலி சரியாக மருத்துவத்தை தாண்டி உளவியலும் அல்லவா கருணை காட்ட வேண்டியதாக இருக்கிறது. அதனால் நான் வெறும் புன்னகையோடு நிறுத்திக் கொண்டேன்.
ஆனால் மனதுக்குள் ஒரு குரல் இப்போது வரை விடாது ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது.
அம்மாவின் அந்த சின்னஞ்சிறு எதிர்பார்ப்பு பொய்த்துப் போக மூட்டு வலி மட்டுமா காரணமாக இருக்க முடியும்? இல்லை... இல்லவே இல்லை.
அட இனி என்ன? இந்த வயதில் போய் அம்மி, ஆட்டுக்கல்லில் எல்லாம் அரைத்து ரசித்து சமைத்து என்ன ஆகப் போகிறது? ருசித்துச் சாப்பிட்டு சமையலைப் பாராட்ட பிள்ளைகளா உடனிருக்கிறார்கள் என்ற வெற்று உணர்வு ஆக்ரமித்திருக்கலாம். அல்லது அறுபது கடந்தாச்சு இனி என்ன ருசி வேண்டி இருக்கு? உப்பு, புளி, காரம் என எதாவது தூக்கலாக சாப்பிட்டு விட்டால் நாள் முழுக்க அஜீரணத் தொல்லையாகி விடுகிறது. போதும்... போதும் என்ற சலிப்பு தான் எல்லாவற்றிற்கும் மூல காரணமாயிருக்க முடியும். சலிப்பு வந்த பின் வாழ்வின் மீதான் சுவாரஸ்யம் படிப்படியாக குறையத் தானே செய்யும். அப்படியே குறைந்து, குறைந்து பின்னொரு நாளில் அது தொலைக்காட்சி சேனல்களின் சீரியல் பைத்தியத்தில் வந்து முடிவுறும் பட்சத்தில் சமையலில் மட்டுமல்ல வாழ்விலும் பிறகெப்போதும் அவர்கள் திட்டமிட்ட அந்த சுவாரஸ்யங்களைத் தேடிக் கண்டடையவே முடிவதில்லை.
ஆதாலால் குடும்பச் சுமையிலிருந்தும், சேனல் சீரியல் அடிக்ஸனில் இருந்தும், குடும்பத்தின் குழப்பப் பஞ்சாயத்துகளில் இருந்தும் ரிடையர்டு சிட்டிஸன்களை காப்பாற்ற ஏதாவது சிந்திக்கலாமே என்று சிந்தித்ததன் விளைவு தான் இக்கட்டுரை :)

ரிடையர்மெண்டுக்குப் பிறகான வாழ்வின் சலிப்பை எப்படிக் கலைவது?
’புதுப் புது அர்த்தங்கள்’ படத்து பூர்ணம் விஸ்வநாதன், சவுகார் ஜானகி ஜோடியைப் போல அத்தனை சுவாரஸ்யமாய் வாழ்ந்து முடிக்கா விட்டாலும் கூட குறைந்த பட்சம் வாழ்வின் சின்னஞ்சிறு ஆசைகளையாவது மிஸ் பண்ணி விட வேண்டாமே!
’மிதுனம்’ என்றொரு தெலுங்குப் படம் எஸ்.பி.பாலசுப்ரமணியமும், லஷ்மியும் வயதான தம்பதிகளாக நடித்திருப்பார்கள். படத்தில் எஸ்.பி.பி தான் ரிடையர்டு ,லஷ்மி இல்லத்தரசியாகத் தான் இருந்திருப்பார், ஆனால் பிள்ளைகள் அனைவரும் வெளிநாட்டில் இருக்க இங்கு கணவரோடு தனித்திருக்கும் மனைவியாக அவருடையதும் ரிடையர்மெண்டுக்குப் பின்னான வாழ்க்கை என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தப் படத்தை வயதான தம்பதிகளின் வாழ்வை சுவாரஸ்யம் குன்றாமல் இருக்கச் செய்ய மேலே சொல்லப்பட்ட அத்தனை விசயங்களும் நிறைக்கின்றன. ரிடையர்டு ஆன சீனியர் சிட்டிஸன்கள் மட்டும் அல்ல, அவர்களது வாரிசுகளும் பார்க்க வேண்டிய படமிது. வாய்ப்பிருந்தால் இணையத்தில் தேடிப் பார்க்கவும்.
மேலே சொன்ன விசயங்களைப் எப்படித் தொடங்குவது என்று சலிப்பிருந்தால் புகைப்படத்தில் சிறு பிள்ளை விளையாட்டாய் தென்னை மரப் பீப்பீ செய்து ஊதிக் கொண்டிருக்கிறார்களே அவர்களைப் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் ப்ளீஸ்!
வாழ்க்கை எப்போதும் அழகானதே!
Image courtsy: google
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...