அதுமட்டுமல்ல விமான நிர்வாகம் தன்னிடம் இப்படி ஒரு கடுமையான கோரிக்கையை வைத்ததுமே எமிலி, விமானத்துக்குள் அமர்ந்திருந்த தனது சக பயணிகளை நோக்கி, ‘நான் இந்த உடையுடன் பயணிப்பதில் உங்களில் யாருக்கேனும் ஆட்சேபணை இருக்கிறதா? இந்த உடை உங்களைத் தொந்தரவு செய்யும் விதத்திலா இருக்கிறது? யாருக்காவது ஆட்சேபம் இருந்தால் சொல்லுங்களேன்’ என்றும் கேட்டிருக்கிறார். ஆனால் எமிலியின் கேள்விக்கு பதிலே சொல்லவில்லை யாரும். கனத்த அமைதி காத்திருக்கிறார்கள். எது எப்படியிருந்த போதும் விமான நிர்வாகம் மட்டும் எமிலியின் ஆட்சேபணையையோ அல்லது எமிலியிஜ்ன் விளக்கத்தையோ கேட்கவே விரும்பவில்லை. அவர்கள் எமிலி வேறொரு ஜாக்கெட் அணிந்து தனது திறந்திருந்த தோள் பகுதி மற்றும் முதுகுப்புறத்தை மறைத்த பின்னரே அவரை நிம்மதியாக விமானத்தில் அமர அனுமதித்திருக்கிறார்கள்.