மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த இந்தக் குட்டிப்பையன் தன் வீட்டுக்கு வெளியே சைக்கிள் ஓட்டி விளையாடிக் கொண்டிருந்திருக்கிறான். நடுவில் தெரியாத்தனமாக பக்கத்து வீட்டுக்காரரின் கோழி வந்து சைக்கிளின் குறுக்கே விழுந்து விடுகிறது. பையனும் சந்தர்பவசமாக கோழியின் மீது சைக்கிளை ஏற்றி விட்டான். உடனடியாக நடந்தது என்ன தெரியுமா? பதறித் துடித்துக்கொண்டு இறங்கி கோழியைத் தூக்கிக் கொண்டு தான் சேர்த்து வைத்த அத்தனை பணத்தையும் எடுத்துக் கொண்டு குட்டிப்பையன் அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு ஓடியிருக்கிறான். எதற்கென்று நினைக்கிறீர்கள்? கோழிக்கு சிகிச்சை அளிக்கத்தான்.

இதைக் கண்டு நெகிழ்ந்து போன சங்கா என்பவர் சிறுவனை அவன் கோழிக்கு சிகிச்சை அளிக்க கையில் பணத்துடன் நின்ற கோலத்தில் புகைப்படமெடுத்து விஷயத்தையும் விவரித்து முகநூலில் அச்சிறுவனை நெக்குருகிப் பாராட்டிப் பகிர்ந்திருக்கிறார்.

சிறுவனை அவனது செயலுக்காக சங்கா மட்டுமே பாராட்டவில்லை. அவன் பயிலும் பள்ளியும் பாராட்டி சால்வை போர்த்தி பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கெளரவித்திருக்கிறது. மிஸோரம்மில் சால்வை போர்த்தி பாராட்டுப் பெறுவதென்பது மிகப்பெரிய கெளரவமாம். அங்கே சால்வை போர்த்தி பாராட்டுவதில் வெவ்வேறு ரகங்கள் உண்டாம். இச்சிறுவனுக்குப் போர்த்தப்பட்டுள்ளது தீரச்செயல் புரிந்தவர்கள் மற்றும் தைரியசாலிகளுக்கு வழங்கப்படும் கெளரவமாம்.
ஹாட்ஸ் ஆஃப் டு யூ குட்டிப்பையா!
சும்மாவா சொல்லிக் கொள்கிறார்கள்... குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று;
அந்தப் குட்டிப்பையனின் மனசு சொக்கத் தங்கமே தான்.
Related Article
எல் கே ஜி சிறுமியை ஃபெயில் ஆக்கிய கல்வி வியாபாரம்!
கிருஷ்ணர் பூமியில் அவதரித்த போது சாட்ஷாத் அச்சு அசலாக இப்படித்தான் இருந்தாராம்!
தாமஸ் குக் VS எமிலி: பெண்களின் உடை விஷயத்தில் கடைசியில் கட்டுப்பெட்டி இந்திய சிந்தனை வென்றது!
மோடியை மயக்கிய ‘கிர்னார் சிங்கம்’!
‘ஹெர்பல் சிகரெட்’ தீங்கு விளைவிக்குமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஓடிடியில் வெளியானது ஹேப்பி ராஜ்!
இந்தியா - நியூஸிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்!

தேர்தல் 1996: ஜெ. நகைக் கோலம்; முதல்வராக மீண்டும் கருணாநிதி!

தங்கம், வெள்ளி விலை குறைந்தது!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


