தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்ஃபார்ம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!

நடிகை ஜூஹி சாவ்லா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அதில் வாழைமரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேசிய வழக்கத்தைப் பற்றி சுருக்கமாக விளக்கியிருந்தார்

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 10:04 am

RKV

நடிகை ஜூஹி சாவ்லா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அதில் வாழைமரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேசிய வழக்கத்தைப் பற்றி சுருக்கமாக விளக்கியிருந்தார்.

அதாவது இந்தோனேசியர்கள் தண்ணீர் பற்றாக்குறையைத் தவிர்க்க வீணாக வெட்டி வீசப்பட்ட வாழைமரத் தண்டுகளைத் தேர்ந்தெடுத்து துளைகளிட்டு அதில் மண் மற்றும் உரத்தை நிரப்பி, அந்த மண்ணில் கீரைகள் மற்றும் காய்கறி விதைகளை விதைத்து புது விதமான விவசாயமொன்றைச் செய்து வருகிறார்கள். இம்முறையில் விவசாயம் செய்யும் போது செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றத் தேவையில்லை வாழைமரத்தண்டில் இருக்கும் நீர்ச்சத்தே செடிகள் வளரப் போதுமான நீர்த்தேவையை வழங்கி விடுகின்றன என்பதோடு பயன்படுத்தி முடிவுக்கு வரும் வாழைமரத்தண்டுகளை அப்புறப் படுத்த வேண்டிய அவசியமும் அவர்களுக்கு இல்லாமலாகிறது.

ஜூஹியின் ட்விட்டர் பகிர்வு...

ஜூஹியின் ட்விட்டர் பகிர்வு...

காய்கறிகளையும், கீரைகளையும் பறிந்த பிறகு இந்த வாழைமரத்தண்டுகளை அப்படியே விட்டு விட்டால் அவை மண்ணோடு மண்ணாக மக்கி மீண்டும் மண்ணுக்குத் தேவையான சத்துக்களை வழங்கும் உரமாக மாறிவிடுகிறது. இம்முறையில் விவசாயம் செய்ய மிகக்குறைந்த அளவே தண்ணீர் தேவைப்படலாம். ஆண்டு முழுவதும் விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை நிலவும் நமது இந்தியா போன்ற பிரதேசங்களில் விவசாயத்திற்கு இத்தகைய நவீன மாற்று வழிமுறைகளைக் கையாண்டால் நன்றாக இருக்குமே! 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.