கடந்த நான்காண்டுகளுக்குள் பெங்களூருவில் தொடர்ந்து அதிகரித்து வரும் பப்களின் எண்ணிக்கையைக் கேட்டால் அசந்து போவீர்கள். பத்தாண்டுகளுக்கு முன்பிருந்த நிலையைக் காட்டிலும் கடந்த நான்காண்டுகளுக்கும் மட்டுமெ 50% எழுச்சியைக் கண்டிருக்கிறது பெங்களூரு பப் கலாச்சாரம். பெங்களூருவில் பன்னாட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க அதற்கேற்றாற் போல பப்களுக்கான லைசென்ஸ்களும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இதனால் ஈர்க்கப்படும் நகரத்து இளைஞர்களும், இளைஞிகளும் குடும்பத்தினர் முன்னிலையில் குடிப்பது, புகைப்பது மாதிரியான புதியதொரு கலாச்சாரத்தை தங்களது வீடுகளில் அரங்கேற்ற முயற்சிக்கின்றனர். இதனால் சமூகத்தின் கலாச்சாரமும், பண்பாடும் சீர்கெடுகிறது.