ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் நடக்கவிருந்த திருமணமொன்றை மணமகளது மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் தடுத்து நிறுத்தியிருக்கின்றன. தொழில்நுட்பத்தை... வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் பயன்படுத்துவதை விடுத்து இப்படியான கெட்ட காரியங்களை நிறைவேற்றப் பயனபடுத்திக் கொள்வது காலங்காலமாக நடைமுறையில் இருக்கும் விஷயமே! முன்பு திருமணங்களைத் தடுத்து நிறுத்துவதில் மொட்டைக்கடிதாசிகள் எப்படிச் செயல்பட்டனவோ அதே விதமாக தற்போது மார்ஃபிங் புகைப்படங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த வகை புகைப்பட உத்தியை பயன்படுத்தி பிடிக்காத எவரொருவரின் வாழ்விலும் சிக்கலையும், குழப்பத்தையும் உண்டாக்கலாம் என்பது நவீனகால கெடுமதியாளர்களின் தீர்க்கமான எண்ணமாக இருக்கிறது.