இதனால் அதிர்ந்து போன மருத்துவர்கள் இவ்விஷயத்தை காவல்துறைக்கு அறிவிக்க விரைந்து வந்த காவல்துறையினர் கண்ணன் குடும்பத்தாரை எச்சரித்ததோடு வீட்டில் பிரசவம் பார்ப்பதால் நேரக்கூடிய ஆபத்துகளைப் பற்றியும் விளக்கியுள்ளனர். அப்போதும் கண்ணன் குடும்பத்தார் தாங்கள் செய்ததே சரி எனப் பிடிவாதமாகச் சாதிக்க, அரசு மருத்துவர்கள், குழந்தையை மட்டுமேனும் கொடுங்கள் சிகிச்சை அளிக்கிறோம் என்று அனுமதி கேட்டிருக்கிறார்கள். ஆனால், கண்ணன் குடும்பத்தார் குழந்தையை தொப்புள் கொடி அறுக்காமல் அப்படியே வீட்டின் உள்ளேயே வைத்துக் கொண்டு அனைத்துக்கதவுகளையும் இழுத்துச் சாத்திக் கொண்டுள்ளனர்.