ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதலே பள்ளி வளாகங்களில் புது அட்மிஷன்களுக்காக பெற்றோர் கூட்டம் களைகட்டும். இந்தமுறை சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி பள்ளி வளாகத்தில் அதிசயத் தக்க வகையில் அப்படியான களேபரக் கூட்ட நெரிசல்களைக் காண முடியவில்லை. என்னவென்று விசாரித்ததில் இந்த ஆண்டிலிருந்து அவர்களது பள்ளியின் சில கிளைகளில் ஆன்லைன் அட்மிஷன் முறையை அறிமுகம் செய்திருக்கிறார்களாம். டி.ஏ.வி உள்ளிட்ட பிரபல தனியார் பள்ளிகளுக்கு ஆன்லைன் அட்மிஷன் முறைகளை மேற்கொள்வதற்கான மென்பொருள் தொழில்நுட்பங்களை நிர்வகிக்கிறது ஸ்கூல் ஸ்கீஸ் எனும் நிறுவனம். இதன் அமைப்பாளர் ஜெகதீஷ் தேவராஜன்.
கோல சரஸ்வதி பள்ளி, டி.ஏ.வி, ஸ்பார்ட்டன் உள்ளிட்ட பள்ளிகளில் இந்த ஆண்டு ஃபிப்ரவரி மாதம் முதல் இந்த ஆன்லைன் அட்மிஷன் முறை செயல்படுத்தப் படவிருப்பதாகவும், மேலும் பல பள்ளிகள் இந்த திட்டத்தில் இணைய ஆர்வமாக விசாரித்து வருவதாகவும், கூடிய விரைவில் சென்னையில் பெரும்பாலான பள்ளிகளில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப் படலாம், இதனால் பெற்றோர்களின் அட்மிஷன் அலுப்பு தீர்ந்து அவர்களுக்கு பள்ளி துவக்க நாட்களுக்கான டென்சன் குறையும் என தேவராஜன் தெரிவித்தார். மேலும் இந்த ஆன்லைன் அட்மிஷன் முறையில் அப்ளிகேஷன் ஃபார்ம்களை நிரப்புவதில் பெற்றோர்களுக்கு சந்தேகங்கள் வரின், உதவும் பொருட்டு சாட் அவுட்புட் விண்டோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பயன்படுத்தி பெற்றோர் எளிதாக தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டு ஃபார்ம்களை நிரப்பு பதிவு செய்யலாம்.
கரண்ட் பில், மளிகை பில், கிரெடிட் கார்டு பில் முதற்கொண்டு அனைத்தையுமே ஆன்லைனில் உட்கார்ந்த இடத்திலிருந்தே கட்டிமுடிக்கும் வசதியுள்ள இந்த டிஜிட்டல் யுகத்தில் பள்ளிகளுக்கான அட்மிஷன்களும் ஆன்லைனில் முடித்துக் கொள்ளலாம் என்பது பெற்றோரைப் பொருத்தவரை மிகப் பெரிய ஆசுவாசம் தரும் மாற்றமே! அடுத்த ஆண்டு துவக்கத்துக்குள் சென்னை பள்ளிகள் அனைத்திலுமே இந்த முறை செயல்பாட்டுக்கு வந்து விடலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஓடிடியில் வெளியானது ஹேப்பி ராஜ்!
இந்தியா - நியூஸிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்!

தேர்தல் 1996: ஜெ. நகைக் கோலம்; முதல்வராக மீண்டும் கருணாநிதி!

தங்கம், வெள்ளி விலை குறைந்தது!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


