மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயக்குமாரின் அரசியல் பிரவேசத்தைப் பற்றி தமிழ் ஊடகங்களில் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக செய்திகள் கசிந்த வண்ணம் இருந்தாலும். தமிழ்நாட்டு அரசியலைப் பொருத்தவரை தீபா வெளிப்படையான, அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு பொது அரங்குகளில், பொதுமக்கள் முன்னிலையில் பிரவேசித்து தனது அரசியல் பணிகளைத் தொடங்கத் தயங்குவதால் அவரது ஆதரவாளர்களில் சிலர் மனச்சோர்வு அடைந்துள்ளனர். தீபாவின் அரசியல் பிரவேசத்தை விரும்பாத சிலரோ ‘தீபா அரசியலுக்கு வர மாட்டார், அவர் தனது அத்தை கோலோச்சிய கட்சியின் அதிகாரப் பங்கீட்டு விசயத்தில் இப்போதையை அதிகார மட்டத்தினருடனும், அதிமுக முன்னணித் தலைவர்களுடனும் ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார் என்பதாக வதந்திகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இது குறித்து செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த தீபா;