ஜெயமோகனின் அனல்காற்று நாவலை அனேகம் பேர் வாசித்திருக்கலாம். ஒளி ஓவியரான மறைந்த இயக்குனர் பாலுமகேந்திரா அதை திரைப்படமாக்கும் எண்ணத்துடன் தன்னிடம் கதை கேட்டு வாங்கியதாக ஜெமோ தனது வலைப்பக்கத்தில் தெரிவித்திருந்தார். பின்பு அந்தப் படத்தை தயாரிப்பதாக இருந்தவர் ஷேர் மார்க்கெட் நஷ்டத்தால் படத்தயாரிப்பையே கைவிட்டு விட அனல்காற்று திரைப்பட முயற்சியும் அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டதாகவும் ஜெமோ எழுதி இருந்தார். படம் டிராப் ஆனாலும் பாலுமகேந்திராவின் கை வண்ணத்தில் தனது நாவல் திரைப்படமாவதில் ஜெமோவுக்கு எதிர்பார்ப்புகள் இருந்ததோ இல்லையோ? இதை அறிந்ததிலிருந்து இருவரது ரசிகர்களுக்கும் கொஞ்சமேனும் ஏமாற்றம் இல்லாமலிருக்க வாய்ப்பில்லை.
இதில் சுவாரஸ்யமான மற்றொரு விசயம் என்ன தெரியுமா? பாலுமகேந்திரா படமாக்கவிருந்த ஜெமோவின் அனல்காற்றில் நாயகனாக நடிக்க தேர்வாகியிருந்த நபர் யாரென்று தெரிந்தால் ஆச்சர்யப் பட்டுப் போவீர்கள். அது விஜய் சேதுபதி. இந்த வருட தினமணி தீபாவளி மலரில் விஜய் சேதுபதி அளித்த பிரத்யேக நேர்காணலில் இந்த விசயத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
திரையுலகில் நுழைந்த ஆரம்ப காலங்களில் வாய்ப்புகளுக்காக பாலுமகேந்திராவைச் சந்தித்த போது, பாலு மகேந்திரா விஜய் சேதுபதியிடம், ‘விஜய் உங்க கண்கள் அழகா இருக்கு. உங்களை ஒரு புகைப்படம் எடுக்கறேன். கதைக்குப் பொருந்தினா நீங்க தான் நான் அடுத்து இயக்கப் போகிற அனல்காற்று படத்தின் ஹீரோ’ என்று சொன்னாராம். சொன்னபடி பாலுமகேந்திரா விஜய் சேதுபதியை புகைப்படம் எடுத்தார். படம் கைவிடப்பட்டாலும் புகைப்படம் இப்போதும் தனது பொக்கிஷங்களுள் ஒன்றாக, தனக்குப் பிடித்த தனது மிகச் சிறந்த புகைப்படங்களில் ஒன்றாகப் பாதுகாப்பாக இருப்பதாக விஜய் சேதுபதி தெரிவித்திருக்கிறார்.
அனல்காற்று நாவலைப் பற்றி அறிந்து கொள்ள விரும்பும் தீவிர வாசகர்கள் ஜெமோவின் தளத்திலேயே அதை வாசித்துக் கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஓடிடியில் வெளியானது ஹேப்பி ராஜ்!
இந்தியா - நியூஸிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்!

தேர்தல் 1996: ஜெ. நகைக் கோலம்; முதல்வராக மீண்டும் கருணாநிதி!

தங்கம், வெள்ளி விலை குறைந்தது!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


