தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

இயற்கை மூலிகை வாசம் பரப்ப வந்துள்ள எலெக்ட்ரிக் சாம்பிராணி கரண்டி!

சிராக்கை பயன்படுத்தி வேப்பிலை புகை போடுவதால் சுவாசக் கோளாறு மற்றும் கொசுத் தொல்லையிலிருந்து விடுதலைக் கிடைக்கும்.

News image
Updated On :1 பிப்ரவரி 2017, 10:24 am

எல்லா சம்பிரதாயத்தினராலும் ஏக மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது அன்றாட சாம்பிராணி புகை போடும் பழக்கம், வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புடைய இந்த பழக்கத்தை இன்றைய நாகரீக உலகில் நாம் மறந்தே போய் விட்டோம், இன்றைய வேகமான இயந்திரமய வாழ்க்கையில் கரிக்கு எங்கே போவது அதை ஊதி ஊதி நெருப்பக்கி எப்போது சாம்பிராணி போடுவது? 

ஆன்மீக சிந்தனையுடன் கூடிய இந்த அறிவியல் பழக்கத்தை தன் கண்டுபிடிப்பின் மூலம் மிகவும் எளிதாக்கி இருக்கிறார்  இந்தப் பொறியியல் பட்டதாரி, இவரது பெயர் கார்த்திக்குமார்.

இவரின் புதுமையான கண்டுபிடிப்பு கனல் என்ற பொருள் கொண்ட சிராக், இது மின்சாரத்தில் இயங்கும் கைக்கு அடக்கமான பல செயல் புரியும் இயந்திரம், மின் பொத்தானை அழுத்திய 5 நிமிடங்களில் சிராக்கின் தட்டு சூடேறுகிறது, சூடேறிய தட்டின் மேல் சாம்பிராணியைப் போட்டதும் நொடி பொழுதில் ஆவியாக்குகிறது. கரி தேவை இல்லை நெருப்பு தேவை இல்லை சிரமப்பட தேவை இல்லை, சிராக்கை மின் இணைப்பிலிருந்து அகற்றி, புகை தேவைப்படும் இடத்திற்கெல்லாம் எடுத்து செல்ல பாதுகாப்பான மர கைப்பிடி கொடுக்கப்பட்டுள்ளது. 

சிராக் சாம்பிராணியை மட்டுமல்லாது, இயற்கை கொசு விரட்டிகளான வேப்பிலை மற்றும் நொச்சியிலைகளையும் ஆவியாக்குகிறது.  தற்போது லிவ்விடேட்டர் பயன்பாட்டினால் 10 இல் 6 குழந்தைகளுக்கு மூச்சடைப்பு   (வீசிங்) போன்ற கொடிய சுவாச நோய்கள் வருகிறது என்று அறிவியல் ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சிராக்கை பயன்படுத்தி வேப்பிலை புகை போடுவதால் சுவாசக் கோளாறு மற்றும் கொசுத் தொல்லையிலிருந்து விடுதலைக் கிடைக்கும். இவரின் மற்றும் ஒரு தயாரிப்பு மூலிகை சாம்பிராணி, இந்த மூலிகை சாம்பிராணி புகை போடுவதால், அது காற்றில் கலந்து உள்ள கொடிய நச்சுக்களை முறியடித்து இயற்கை நறுமணத்தை தருகிறது, பிளாஸ்டிக் மற்றும் வேறு எந்த வேதிப் பொருளும் பயன்படுத்தாமல் வடிவமைக்கப்பட்டுள்ளதால் சிராக் இயற்கைக்கு உகந்த இயந்திரம் எனலாம்.

சிராக்கிற்கான காப்புரிமையை  அதன் கண்டுபிடிப்பாளரான பொறியாளர் கார்த்திக்குமார் பெற்று சிராக்-ஐ தற்போது சந்தையில் அறிமுக படுத்தியுள்ளார்.
அறிவியலும் ஆன்மீகமும் ஒன்றிணைந்த இந்திய வாழ்க்கை முறையில் சிராக் மற்றும் மூலிகை சாம்பிராணியின் பயன்பாட்டினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் மனித ஆரோக்கியமும் மேன்மைப்படும் என நம்பலாம். 

இந்த நவீன சாம்பிராணி மெஷின் பற்றி மேலும் தெரிந்து கொள்ள 9962087220, 044 26562756 எனும் எண்களைத் தொடர்பு கொள்ளலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.