திருநங்கைகள் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்த இந்திய மக்களின் அணுகுமுறை இப்போதும் மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில் விரும்பத் தகாததாகவே கருதப் பட்டு வருகிறது. இந்தச் சூழல் மாறிக் கொண்டே வருவதற்கான உதாரணங்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெற்றாலும் அவர்களுக்கான சமூக நீதி முழுமையாகக் கிடைத்து விட்டது என்று சொல்லி விட முடியாது. ஏனெனில் அவர்களுக்கான சமூக அங்கீகாரங்கள் வலுப்படவும் அவர்களே தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டியதாகிறது. அந்த வகையில் இன்றைய பரபரப்பான செய்தி பஞ்சாபைச் சேர்ந்த திருநம்பி பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறியவர்) மஞ்ஞித் கெளர் என்பவர் தனது தோழியும் பார்ட்னருமான மற்றொரு பெண்ணை இந்து திருமணச் சம்பிரதாய முறைப்படி மணம் புரிந்துள்ளார். இது மேலோட்டமாகப் பார்த்தால் சாதாரண விசயமே. ஆனால் மஞ்ஞித் கெளர் இதைச் சாதித்தது தனது பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரது சம்மதத்துடனும் எனும் போது இந்தச் சம்பவம் மக்களிடையே கவனம் ஈர்க்கிறது.