டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

அமீர்கான் வீட்டில் திருட்டு!

அமீர்கானின் வீட்டில் சுமார் 80 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள வைர நெக்லஸ் மற்றும் வைர மோதிரம் இரண்டும் திருடு போய் விட்டதாம்

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:49 pm

கார்த்திகா வாசுதேவன்

மும்பை பாந்த்ரா பகுதியில் இருக்கும் அமீர்கானின் வீட்டில் சுமார் 80 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள வைர நெக்லஸ் மற்றும் வைர மோதிரம் இரண்டும் திருடு போய் விட்டதாம். நகைகளின் உடைமையாளரான அமீர்கானின் மனைவி கிரண் ராவ் சார்பில் இது தொடர்பாக மும்பை பாந்த்ரா பகுதியில் இருக்கும் கர் காவல் நிலையத்தில் கிரணின் உறவினர் ஒருவர் புகார் அளித்திருக்கிறார்.
உறவினர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல துறை அதிகாரிகள் IPC 453 பிரிவின் கீழ் (குடியிருக்கும் வீட்டில் திருட்டு) வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் காவல் துறையினரின் முதன்மை சந்தேகம் அமீர்கான் வீட்டு வேலையாட்கள் மீது திரும்பி இருக்கிறது. அதன் அடிப்படையில் வீட்டு சமையல்காரர், கிரண் ராவின் உதவியாளர், வீட்டு வேலைக்காரப் பெண்மணி முதலியோரை காவல நிலையத்திற்கு வரவழைத்து காவலர்கள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர், ஆனாலும் இந்த வழக்கில் இதுவரை உண்மைக் குற்றவாளி என எவரும் பிடிபடவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.