ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

நாண் - பனீர் பட்டர் மசாலா

செய்முறை: மைதா மாவுடன் பேக்கிங் பவுடர் மற்றும் சோடா மாவை (இட்லி சோடா) நன்றாக கலந்து

Updated On :25 ஜூன் 2016, 6:27 am

நாண் செய்ய தேவையானவை:

மைதா மாவு - 2 கிண்ணம்

பேக்கிங் பவுடர் - 3/4 தேக்கரண்டி

ஆப்ப சோடா - கால் தேக்கரண்டி

பால் - அரை டம்ளருக்கும் சற்று குறைவு

தயிர் - அரை டம்ளர்

உப்பு - தேவைக்கேற்ப

சர்க்கரை - அரை தேக்கரண்டி

Story image

செய்முறை: மைதா மாவுடன் பேக்கிங் பவுடர் மற்றும் சோடா மாவை (இட்லி சோடா) நன்றாக கலந்து வைக்கவும். இதில் சர்க்கரை மற்றும் உப்பையும் கலந்து விடவும்.

இதில் வெது வெதுப்பான பால் மற்றும் தயிரை ஊற்றி கைகளால் லேசாக கலந்து விடவும்.

மாவை அழுத்தி பிசைய தேவை இல்லை. சற்று ஈரப்பதம் அதிகமாகவே இருக்கும். கை விரல்களால் அப்படியே கலந்து திரட்டி உருட்டி வைத்தால் போதும். இதை மூடி போட்டு 1 மணி நேரம் வைக்கவும். பின் மாவை உருண்டைகளாக பிரித்து வைக்கவும். அவற்றை சப்பாத்தி இடுவது போல் மைதா தூவி தேய்க்கவும். பின்னர், நான்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து, தேய்த்து வைத்த நாணை வைத்து மேலே நீர் தெளித்து நீர் உள்ள பக்கம் தவாவில் படுவது போல் ஒட்டி விடவும். இதை மூடி 1 நிமிடம் மிதமான தீயில் வேக விடவும். நன்றாக ஆங்காங்கே உப்பி வரும். பின்னர், நாணை எடுத்து மேல் பக்கத்தை நேரடியாக தீயில் திருப்பி போடவும்.  இப்போது சுவையான சாஃப்ட்டான நாண் தயார்.

(குறிப்பு: விரும்பினால் சிறிது வெண்ணெயை நாண் மேலே தடவலாம். பால் வெது வெதுப்பாக இருக்க வேண்டும். புளிக்காத தயிர் இருப்பது அவசியம். மாவுடன் பேக்கிங் பவுடர் மற்றும் சோடா மாவு சரியாக கலப்பது முக்கியம்)

பனீர் பட்டர் மசாலா

தேவையானவை:

பனீர் - 1 கிண்ணம்

பட்டர் - 1 தேக்கரண்டி

எண்ணெய் - 2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

வெங்காயம் -1

தக்காளி - 1

இஞ்சி பூண்டு விழுது -1 தேக்கரண்டி

உப்பு - 1 தேக்கரண்டி

பால் - 1 டம்ளர்

மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி

தனியாத் தூள் - 1 தேக்கரண்டி

கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி

தக்காளி சாஸ் - 1 தேக்கரண்டி

கொத்துமல்லி - சிறிதளவு

Story image

செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை தாளித்து, இஞ்சி- பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்னர், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் அரைத்த தக்காளி விழுதையும் அதனுடன் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர், வேறொரு பாத்திரத்தில் மிளகாய்த் தூள், தனியாத் தூள், கரம் மசாலா, தக்காளி சாஸ், உப்பு, பால் சேர்த்து கட்டி படாமல் கலக்கவும். பின்னர், வதங்கிய தக்காளியுடன்  பாலில் கலந்த மசாலா கலவையையும் சேர்த்து கிளறவும். அத்துடன் மீதமுள்ள பாலை சேர்த்து கொதிக்கவிடவும். பின் அதில் பனீர் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும். பனீர்பட்டர்மசாலா ரெடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.