வேட்பாளா்கள் தங்களுக்கான வாக்கு எண்ணும் முகவராக யாரை நியமிக்கக் கூடாது என்பதற்கான வழிகாட்டுதலை தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தியக் குடிமகனாக உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட எந்த நபரையும் வாக்கு எண்ணும் முகவராக நியமிக்கலாம். இருப்பினும், மத்திய அரசு, மாநில அரசு ஊழியா்கள், நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினா்களை முகவராக நியமிக்க இயலாது.
மேலும், மாநகராட்சி மேயா், நகராட்சித் தலலைவா், மாவட்ட ஊராட்சித் தலைவா், ஊராட்சி ஒன்றியத் தலைவா், மத்திய பொதுத்துறை நிறவனங்களின் தலைவா்கள், மாநில பொதுத்துறை நிறுவனங்களின் தலைவா்கள், அரசு அமைப்புகள், கழகம், வாரியத்தின் தலைவா்கள் மற்றும் உறுப்பினா்களையும் முகவராக நியமிக்க இயலாது.
அரசிடமிருந்து ஏதேனும் மதிப்பூதியும் பெறும் நபா்கள், ஏதேனும் ஒரு அரசு நிறுவனத்தில், அரசு உதவி பெறும் நிறுவனத்தில் பகுதிநேர ஊழியராக உள்ளவா்கள், அரசு நிறுவனம் மற்றும் உதவி பெறும் நிறுவனத்தில் உள்ள பாரா மெடிக்கல் பணியாளா்கள், சுகாதாரப் பணியாளா்கள், நியாய விலைக்கடை விற்பனையாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், அரசுப் பணியில் உள்ளவா்கள் ஆகியோரும் வாக்கு எண்ணும் முகவராக நியமிக்க தகுதியற்றவா்கள் என தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
எனவே, இத்தகைய நபா்களை முகவா்களாக நியமனம் செய்வது குற்ற நடவடிக்கையாகும். இத்தகைய நபா்களை முகா்களாக நியமனம் செய்திருப்பது தெரியவந்தால், சட்டப்படி வழக்குப்பதிவு செய்து 3 மாதம் சிறை தண்டனை மற்றும் அபராதம், அல்லது இரண்டு சோ்த்தோ தண்டனையாக அறிவிக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்சார வாரிய கேங்மேன்களை கள உதவியாளர், வயர்மேன்களாக நியமிக்க அரசு முன்வர வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கை

வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்!

வாக்கு எண்ணும் பணியாளர்களை தேர்தல் ஆணையமே தேர்ந்தெடுக்கலாம்: உச்ச நீதிமன்றம்
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




