40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

ரூ. 142 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல்: மூன்று மாநிலங்களில் அமலாக்கத் துறை சோதனை

மிசோரம், திரிபுரா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 3 மாநிலங்களில் அமலாக்கத்துறை தீவிர சோதனைகளில் ஈடுபட்டுள்ளது குறித்து...

News image

மூன்று மாநிலங்களில் அமலாக்கத் துறை சோதனை - கோப்புப்படம்

Updated On :8 ஜூன் 2026, 12:04 pm IST

ரூ. 142 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் கும்பல் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், மிசோரம், திரிபுரா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 3 மாநிலங்களில் உள்ள பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை அமலாக்கத்துறை தீவிர சோதனைகளில் ஈடுபட்டுள்ளது.

மிசோரம்-மியான்மர் மற்றும் திரிபுரா-வங்கதேசம் ஆகிய சர்வதேச எல்லைப் பகுதிகளுக்கு அருகில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 2025 ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரிபுராவில் 49.10 கிலோ மெத்தாம்பேட்டமைன் மற்றும் 40 கிராம் ஹெராயின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை இந்த சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

ஒரு திட்டமிட்ட எல்லை தாண்டிய கடத்தல் கும்பல், மிசோரமின் சம்பாய், சோகாவ்தார் பகுதி வழியாக மியான்மரிலிருந்து மெத்தாம்பேட்டமைனை கடத்தி வந்து, திரிபுராவில் உள்ள பெறுநர்களுக்கு விநியோகிக்கும் ஒரு திட்டமிட்ட எல்லை தாண்டிய கடத்தல் கும்பல் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

குற்றச் செயல் மூலம் ஈட்டப்பட்ட ரூ. 142 கோடி மதிப்பிலான பணம், பல வங்கிக் கணக்குகள் மற்றும் போலி நிறுவனங்கள் வழியாகப் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டு மறைக்கப்பட்டுள்ளது அமலாக்கத்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Summary

The Enforcement Directorate (ED) on Monday carried out searches at several locations across Mizoram, Tripura and West Bengal in connection with a money laundering probe linked ....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.