தமிழக அரசு அனுப்பிய மெட்ரோ திட்ட அறிக்கையில் குறைகள்!
தமிழ்நாடு அரசு அனுப்பிய மெட்ரோ திட்ட அறிக்கையில் குறைகள் இருப்பதால் மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளதாக அண்ணாமலை கருத்து..
தமிழ்நாடு அரசு அனுப்பிய மெட்ரோ திட்ட அறிக்கையில் குறைகள் இருப்பதால் மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளதாக அண்ணாமலை கருத்து..
By இணையதளச் செய்திப் பிரிவு
Manivannan.S
தமிழ்நாடு அரசு அனுப்பிய மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையில் குறைகள் இருப்பதால் மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு மீது பழி போடாமல் புதிய அறிக்கையை தயார் செய்து தமிழக அரசு அனுப்ப வேண்டும் என்றும், குறைபாடுகள் உள்ள அறிக்கையை அனுப்பிவிட்டு மத்திய அரசை குறை கூறுவது கண்டனத்துக்குரியது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசின் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையில் உள்ள பிழைகளை சுட்டிக்காட்டி மத்திய நகர்புற மேம்பாட்டுத் துறை வெளியிட்டிருந்த அறிகையைக் குறிப்பிட்டு அண்ணாமலை பதிவிட்டுள்ளதாவது,
தவறான விரிவான திட்ட அறிக்கையை ஒப்புதலுக்காக சமர்ப்பித்து, அதை நிராகரித்ததற்காக மத்திய அரசைக் குறை கூற திமுக வேண்டுமென்றே முயற்சிப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
மத்திய அரசின் திறமையின்மையை நிரூபிப்பதாகக் கூறி, தூசி படிந்த நாடகப் புத்தகத்திலிருந்து ஒரு இலையை எடுத்துக்கொள்வதை நிறுத்திவிட்டு, விரைவில் விரிவான திட்ட அறிக்கையை ஒப்புதலுக்காக மீண்டும் சரிபார்த்து அனுப்ப வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | கோவை, மதுரை மெட்ரோ... பிரதமர் மோடியிடம் எடப்பாடி பழனிசாமி மனு!
Flaws in the metro project report sent by the Tamil Nadu government
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது